மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -10

பீஷ்மரும் பாண்டவர்களின் படை தளபதியான திருஷ்டத்துய்மனும் நேருக்கு நேர் போரில் சந்தித்தனர். வில் வித்தையில் தான் குருவையே தோற்கடித்தவர் பீஷ்மர் என்பதால் அவரின் ஆற்றல் என்ன என்பதை திருஷ்டத்துய்மன் நன்கு அறிவான். சாமர்த்தியமாக அவரை தாக்காமல் அவருடைய அனைத்து தாக்குதலையும் தடுத்து பீஷ்மரை சோர்ந்து போக வைத்தான்.

அர்ஜுனனும் துரோணரும் நேருக்கு நேர் சந்தித்தனர். அர்ஜூனனை பார்த்து துரோணர் அர்ஜுனா நீ என்னை வென்றால் அதனால் பெருமை எனக்கு தான். தயங்காமல் உன் அம்புகளை செலுத்து இது உனக்கும் எனக்கும் நடக்கும் போர் அல்ல. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர். வீழ்வது நானாக இருப்பினும் வெல்வது தர்மமாக இருக்க வேண்டும். நான் என் ஆற்றலை குறைத்து யுத்தம் செய்ய மாட்டேன் என் முழு ஆற்றலுடன் போர் செய்வேன். என்னை நீ இந்த போரில் வென்றால் நீ வில்லுக்கு விஜயன் என்று பெயர் பெறுவாய். வில்லுக்கு விஜயன் என்ற புகழ் உன்னை சேரட்டும் என்று ஆசி வழங்கினார். குருவின் ஆசியோடு அம்புகளை செலுத்தினான் அர்ஜுனன். அம்புகள் காற்றை கிழித்து கொண்டு பாய்ந்தன. அக்னி மற்றும் வாயு அஸ்திரங்களை செலுத்தினான். துரோணரும் அதற்க்கு ஈடாக போர் புரிந்தார். இருவரின் ஆயுதங்கள் தீர்ந்து போகும் நிலையில் இருவரும் சோர்ந்தனர். கிருஷ்ணர் அர்ஜுனரிடம் இன்று நீ புரிந்த யுத்தம் தான் துரோணரின் தலைமை சீடன் என்பதை உலகிற்கு தெரிவித்தது என்று கூறி ஊக்கம் அளித்தார்.

நகுலனும் சகாதேவனும் காலாட்படைகளை சிதறடித்தனர். நகுலனின் வாள் சுழர்ச்சியும் சகாதேவனின் ஈட்டியும் போர் களத்தில் புயலை உருவாகியது. அன்றிய போரில் சகாதேவன் வீசிய ஈட்டிகளின் எண்ணிக்கை 17485. ஆறாம் நாள் போரில் பாண்டவர்களின் கை ஓங்கி இருந்தது. அர்ஜுனன் துரோணர், பீமன், துரியோதனன், பீஷ்மர், திருஷ்டத்துய்மன், நகுலன் சகாதேவன் என அனைவரும் சோர்ந்திருந்த நிலையில் மாலையில் சூரியன் அஸ்தமித்தான். ஆறாம் நாள் போர் முடிவிற்கு வந்தது.

ஏழாம் நாள் யுத்தத்திற்கு அனைவரும் தயாரானர்கள். ஆறாம் நாள் போரில் சோர்வடைந்த துரியோதனன் அடுத்த நாள் காலை பீஷ்மரிடம் முறையிட்டான். எனது அச்சமும் சோர்வும் என்னை விட்டு அகவில்லை. உங்கள் உதவி இல்லாமல் நான் எப்படி வெற்றி பெறுவேன் எனக் கெஞ்சிக் கேட்டான். பீஷ்மர் என்னால் முடிந்த அளவிற்கு போர் செய்து கொண்டு தான் இருகிறேன் என்று கூறினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.