பிஜிலி மஹாதேவ் சிவன்கோயில்

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தற்போது இருக்கும் இமாச்சல் பிரதேசத்தில் தவத்தின் மூலம் அழிக்கமுடியாத வரத்தை வாங்கிய அசுரன் ஒருவன் பாம்பு வடிவம் எடுத்து அங்குள்ளவர்களை கொடுமை செய்து வந்தான். அனைவரும் சிவனை வேண்ட சிவன் அசுரனை மலையாக மாற்றி இந்திரனை அழைத்து மலையை அழிக்குமாறு பணித்தார். இந்திரன் தன்னுடைய வஜ்ராயுதம் மூலம் இடி மின்னலை வரவழைத்து மலையை அழித்தார். அரக்கன் 12 வருடங்களுக்கு ஒருமுறை உயிர்த்தெழுந்து மலைவடிவில் அனைவரையும் துன்புறுத்தினான். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்திரனும் இடி மின்னல் மூலமாக அவனை தாக்க தான் பெற்ற வரத்தால் மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டே இருந்தான். இந்திரன் அசுரனை தாக்க அனுப்பிய இடி மின்னல் அசுரனுடன் மக்களையும் தாக்கியது. இதனால் மக்கள் சிவனை வேண்டினர். மலையாக இருக்கும் அசுரன் 12 வருடங்களுக்கு ஒரு முறை உயிர் பெறும் போது இந்திரன் தாக்கும் இடி மின்னலை சிவனே ஏற்றுக்கொண்டு அசுரனை அழித்து இன்றும் மக்களை காப்பாற்றுகிறார்.

தற்போது இமாச்சல் பிரதேசத்தில் குளுமணாலியில் இருக்கும் பிஜிலி மஹாதேவ் கோயில் சிவலிங்கத்தை மட்டும் 12 ஆண்டுக்கு ஒரு முறை இடி மின்னல் தாக்கும். கோவிலுக்கோ கோவிலின் மேற்கூரைக்கோ அதன் சுற்றுப்புறத்திற்கோ ஒன்றும் ஆகாது. இடி மின்னல் தாக்கிய உடன் சிவலிங்கம் தூள் தூளாக நொறுங்கிவிடும். மறுநாள் கோவில் பண்டிட் உடைந்த துகள்களை சிவலிங்கம் இருக்கும் இடத்தில் ஒன்று சேர்ந்து வைத்து அபிஷேகம் செய்து பூஜை செய்து கோவிலை முடிவிட்டு செல்வார். அடுத்த நாள் உடைந்த துகள்கள் ஒன்று சேர்ந்து சிவலிங்கமாக காட்சி கொடுக்கும். பல ஆண்டுகளாக 12 வருடங்களுக்கு ஒரு முறை இச்சம்பவம் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.