ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 278

கேள்வி: ஐயனே அம்மை நோய் எதனால் ஏற்படுகிறது? மக்கள் மாரியம்மன் உடம்பி்ல் இறங்கி விட்டதாக எண்ணி இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அன்னையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவரிடம் செல்லாமல் வீட்டிலேயே வேப்பிலை சிகிச்சையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அதற்கேற்றாற் போல் நான்கைந்து தினங்களில் அம்மை நோய் இறங்கி விடுகிறது. மருத்துவர்களோ இது நோய்க் கிருமிகளால் ஏற்படுகிறது. சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் என்கின்றனர். இதில் எது உண்மை?

இறைவன் அருளால் இதுபோல் பல்வேறு நோய்களுக்கு மனிதன் பல்வேறு விதமான காரணங்களைக் கற்பித்துக் கொள்கிறான். இது ஒருபுறமிருக்கட்டும். எல்லா நோய்களும் கிருமிகளால் ஏற்படுகின்றன என்பது மனித விஞ்ஞானத்தின் கருத்து. நாங்கள்(சித்தர்கள்) அதை மறுக்கவில்லை. கிருமிகள் ஏன் ஏற்படுகின்றன? என்பதை மனிதன் ஆய்ந்து பார்க்கவேண்டும். எத்தனையோ கிருமிகள் எப்பொழுதுமே சுற்றிக் கொண்டிருக்க அந்த கிருமிகள் ஏன் குறிப்பிட்ட மனிதனை தாக்க வேண்டும்? எனவே மீண்டும் மீண்டும் பாவகர்மா என்ற நிலைக்குதான் நாங்கள் (சித்தர்கள்) வரவேண்டும். இது ஒருபுறமிருக்க தீவிரமான பக்தியிருந்தால் மனதிலே அணுவளவும் கபட எண்ணம் இல்லாமலிருந்தால் நல்ல எண்ணங்களும் சாத்வீக எண்ணங்களும் இருந்தால் தீவிரமான பக்தியோடு நல்ல எண்ணங்களும் சேர இவன் கூறிய நோயை மட்டுமல்ல எந்த நோயையும் மனிதன் விரட்டலாம் மருத்துவ சிகிச்சை இல்லாமல். இப்படி நாங்கள் (சித்தர்கள்) கூறினால் அடுத்ததொரு வினா வரும். அப்படியானால் இருக்கின்ற எல்லா மருத்துவமனைகளையும் இடித்துவிட்டு ஆலயங்களாக கட்டிவிடலாம் அல்லவா? வெறும் பிராத்தனைகள் மூலம் எல்லா நோய்களையும் நீக்கலாம் அல்லவா? என்று. விதி வழியாக நோய் வருவது இருக்கட்டும். மனிதனே தன்னை நன்றாக பராமரிக்க வேண்டும் தன் சுற்றுப்புறத்தை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வில்லாமல் அவனாகவே வரவழைத்துக் கொள்வது யார் குற்றம்? என்று பார்க்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு நோய்க்கு சிகிச்சையே செய்யாதே என்று நாங்கள் (சித்தர்கள்) ஒருபொழுதும் கூறமாட்டோம். தெய்வத்தை நம்பு. வேண்டாம் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதையும் நாங்கள் தவறு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் சிகிச்சை எடுத்தால்தான் ஒரு பாதிப்பு வந்தது என்றோ பிராத்தனையால்தான் பாதிப்பு வந்தது என்ற வார்த்தைதான் நாங்கள் (சித்தர்கள்) ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனென்றால் சிகிச்சை செய்தாலும் அல்லது பிராத்தனை செய்தாலும் ஒரு நோயால் ஒருவனுக்கு பாதிப்பு வந்துதான் ஆகவேண்டும் என்ற விதி இருப்பின் அந்த பாதிப்பு வரத்தான் செய்யும். இதையெல்லாம் தாண்டி இவன் குறிப்பிட்ட நோய் மற்றும் இன்னும் சில நோய்களெல்லாம் இறைவனே மனித உடலில் ஆக்கிரமிப்பு செய்வதாக மனிதன் எண்ணுகிறான். இதை சித்தர்கள் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. அது மட்டும்லாமல் இந்த மூடத்தனத்தின் உச்சம் என்னவென்றால் அன்னை இறங்கியிருக்கிறாள். எனவே அது அம்மையாகவே காட்சியளிப்பதாகவே கொள்வோம். ஆனால் அதற்கு சிகிச்சையளித்ததால் அன்னைக்கு கோபம் வந்துவிட்டது என்ற கருத்து மிகவும் ஏற்க முடியாத வாதம்.

கோடானு கோடி உயிர்களை துடிக்க துடிக்க கொல்லும் போது அன்னைக்கு வராத கோபம் அடுத்தவனை வஞ்சித்து ஏமாற்றும் பொழுது அன்னைக்கு வராத கோபம் அடுத்தவன் சொத்தையெல்லாம் ஏமாற்றி பிடுங்கும் பொழுது அன்னைக்கு வராத கோபம் இந்த உலகம் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணி எத்தனையோ நச்சுத் தொழிலையெல்லாம் விடமாட்டேன் எனக்கு இதில் லாபம் கிட்டுகிறது. அடுத்த வரும் தலைமுறை எப்படி போனால் எனக்கென்ன? என்று மனிதர்கள் செயல்படும் பொழுது அன்னைக்கு வராத கோபம் தன் பிணி போக வேண்டும் என்று ஒரு மருத்துவ முயற்சி எடுத்தால் மட்டும் வந்து விடப் போகிறதா என்ன? மனிதனுக்கு சந்திக்கின்ற அறிவை பிரம்மதேவன் தந்திருக்கிறாரப்பா. சற்றே சிந்தித்துப் பார்த்தால் நன்றாக இருக்கும். ஒரு நோய்க்கு சிகிச்சை செய்வதும் தவறல்ல பிராத்தனை செய்வதும் தவறல்ல. அவன் விதி எவ்வாறோ அவ்வாறுதான் நடக்கும். அந்த விதியையும் மாற்றத்தான் நாங்கள் (சித்தர்கள்) எப்பொழுதுமே தர்மம் தர்மம் தர்மம் தர்மம் என்று எப்பொழுதுமே கூறிக் கொண்டேயிருக்கிறோம். இதை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

தர்மத்தின் சிறப்பை உணர்த்தும் கதை

ஒரு காலத்திலே பல்வேறுவிதமான பணிகளை செய்யக் கூடிய மனிதர்கள் இருக்க அவர்களில் இல்லங்களை பழுதுபார்க்கும் ஒருவன் இருந்தான். ஜாதி பேதங்கள் கடுமையாக இருந்த காலமது. சில நாட்களாக பணியில்லாமல் இருந்த அவன் பக்கத்து ஊருக்கு பணி தேடுவதற்காக புறப்பட்டான். செல்லும் வழியில் ஒரு காடு. அந்த வனத்தை கடந்து அவன் போகும் பொழுது மகனே வா என்று அன்பொழுக யாரோ அழைப்பது போல் அவனுக்குத் தோன்றுகிறது. யார் நீ? எனக்கு பயமாக இருக்கிறது. ஓர் உருவத்தையும் இங்கு காண முடியவில்லையே? என்றான் மனிதன். அச்சம் வேண்டாம் மகனே ஒரு காரியத்தின் பொருட்டுதான் உன்னை அழைத்தேன். உன் நீண்ட கால வறுமையும் நீங்கிவிடும் என்றது அக்குரல். யார் என்னிடம் பேசிக் கொண்டிருப்பது? என்றான் மனிதன். நான் வனதேவதை. நான் உன் கண்ணுக்கு தெரியமாட்டேன். ஆனால் நான் சொல்வதை நீ செய்தே ஆக வேண்டும். ஏதும் குழப்பமில்லை. நான் சொல்வதை மட்டும் கேள். சரி சொல் என்றான் மனிதன். இதொ இந்த ஆலயத்தின் வடகிழக்கு மூலையிலே ஒரு அற்புதமான மணம் பரப்பும் பாரிஜாத மரம் இருக்கிறது. அதிலுள்ள மலர்களை பறித்து இங்குள்ள சிவபெருமான் சாற்றி வணங்கிவிட்டு அம்மரத்தின் பக்கத்தில் இத்தனை தூரம் குழி தொண்டு என்று வனதேவதை கூற இவனும் பவ்யமாக அவ்வாறே செய்கிறான். அங்கே ஏராளமான தங்கத் துவர்கள் (துவரம் பருப்பு) இருந்தன. இதை பார்த்தவுடன் அந்த மனிதனுக்கு ஆசை பொங்கி விட்டது. எல்லாவற்றையும் எடுத்து தன்னிடம் உள்ள ஒரு கோணிப்பையிலே போட்டு முடிக்கும் பொழுது வனதேவதை குறுக்கிட்டது. மகனே அவசரப்படாதே. அத்தனையையும் எடுத்துக் கொள்ளாதே. அது உனக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில் ஒரு சிறிய பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அங்கேயே வைத்துவிடு. நான் காரணமாகத்தான் கூறுகிறேன். முழுவதையும் எடுத்துக் கொள்ள உன் விதி இடம் தரவில்லை என்று வனதேவதை கூற அதெல்லாம் முடியாது. எனக்கென்று காட்டினாய். இப்பொழுது மாற்றிப் பேசினால் என்ன பொருள் முழுவதும் எனக்கே சொந்தம் என்றான் மனிதன். வேண்டாமப்பா பகுதியாவது வைத்துவிடு. முடியாது. வேண்டாம் மகனே கால் பகுதியையாவது மீதம் வை. ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன” என்றது வனதேவதை. அதெல்லாம் முடியாது என்றான் மனிதன். மீண்டும் வனதேவதை பலமுறை கெஞ்ச என்ன இது? உன் தொல்லை அதிகமாகி விட்டதே? என்று அலுத்துக் கொண்டே நான்கே நான்கு கனகப்பருப்பை மட்டும் மீதம் வைத்து விட்டு மற்றவற்றையெல்லாம் மூடை கட்டி அந்த வனதேவதைக்கு நன்றி கூட சொல்லாமல் காட்டை விட்டு வெளியேறுகிறான்.

ஏதாவது பணி கிடைத்தால் அந்த பணியையும் செய்து அதில் வரும் தனத்தையும் பெறலாமே? என்ற பேராசையோடு ஓர் ஊரை அடைகிறான். அந்த ஊரிலே ஒரு பெண்ணின் வீட்டு மேல்விதானம் சிதிலம் அடைந்திருந்தது. ஓடுகள் அலங்கோலமாக இருந்தது. அந்த பெண்மணி இவனிடம். அப்பா என் வீட்டு ஓடுகளை எல்லாம் சரி செய்து தருவாயா? என்று கேட்க அது எனக்கு கை வந்த கலை. செய்து தருகிறேன். அதற்கு எவ்வளவு தனம் தருவீர்கள்? என்று இம்மனிதன் கேட்க அப்பெண்மணி ஒரு தொகையைக் கூற இந்த பெண்மணி குறைவாகத்தான் சொல்கிறாள். என்றாலும் கிடைத்தவரை இலாபம்தானே? என்று எண்ணி மூடையை ஓரமாக வைத்துவிட்டு மேலே ஏற முற்படுகிறான். அந்த மூடையைப் பார்த்த அப்பெண்மணி இது என்னப்பா மூடை? என்று கேட்க அது ஒன்றுமில்லை தாயே என் மனைவி சமையலுக்கு பருப்பு வாங்கி வரும்படி சொன்னாள். சந்தையிலே வாங்கிக் கொண்டு போகிறேன் என்றபடியே மேலேறி ஓடுகளை சரிசெய்யும் பணிகளில் இறங்குகிறான். அப்பெண்மணி வீட்டின் உள்ளே சென்று சமையல் செய்யத் துவங்குகிறாள். அப்போது தான் பருப்பு இல்லை என்று என்பது நினைவிற்கு வருகிறது. உடனடியாக அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. இதோ இவன்தான் பருப்பு மூடை வைத்திருக்கிறானே? இதிலிருந்து சிறிது எடுத்துக் கொள்வோம். அதற்குரிய தனத்தை மாலையிலே சேர்த்துக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்து அப்பா உன் மூடையிலிருந்து சிறிது பருப்பு எடுத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்கிறாள். வேலை மும்முரத்தில் இருந்தவனுக்கு இப்பெண்மணி கேட்டது காதில் விழவேயில்லை. சரி பிறகு இவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று மூடையை அந்தப் பெண்மணி திறந்து பார்க்கிறாள். உள்ளே கனக துவரம் பருப்புகள். ஆச்சிரியம் மேலிட அப்பா எத்தனை தங்கம்? என்று எண்ணுகிறாள். வழக்கம் போல் அங்கே அவளுக்கு அசுர புத்தி தலை தூக்குகிறது. துவரம் பருப்பு என்று சொல்லி இவன் நம்மை ஏமாற்றி விட்டானே? என்று எண்ணியவள் சூழ்ச்சியாக அந்த கனக பருப்புகளை எல்லாம் வேறு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு உண்மையான பருப்பை வாங்கிக் கொட்டி மூடையாக மூடி மீண்டும் அதே இடத்திலேயே வைத்து விடுகிறாள்.

அந்த மனிதன் ஓட்டு வேலை முடிந்ததும் கூலியைப் பெற்றுக் கொண்டு மூடையை எடுத்துக் கொண்டு செல்கிறான். திடீரென்று அவனுக்கு ஒரு நப்பாசை. அந்த வனதேவதையின் ஆலயத்திற்கு அருகே வந்தவுடன் அந்த மூடையை திறந்து பார்க்கிறான். உள்ளே எல்லாம் பருப்பாக இருக்கிறது. அவனுக்கு ஒரே அதிர்ச்சி. ஆஹா அந்தப் பெண்மணி நம்மை நன்றாக ஏமாற்றி விட்டாள். திரும்பி சென்று அவளிடம் கேட்பதானால் எந்த ஆதாரத்தை வைத்துக் கேட்பது?. உண்மையையும் சொல்ல முடியாதே? என்று வேதனைப்பட்டு அழத் தொடங்கினான். அப்பொழுது அந்த வனதேவதையின் குரல் கேட்டது. மகனே ஏனப்பா அழுகிறாய்? தாயே கொடுப்பது போல் கொடுத்து மீண்டும் அத்தனையும் பறித்துக் கொண்டாயே? நாங்கள் மனிதர்கள் மோசக்காரர்கள் ஒத்துக் கொள்கிறோம். தேவதை வர்க்கமான நீ இப்படி செய்யலாமா? இது நியாயமா? என்று அம்மனிதன் கேட்க மகனே அதற்குத்தான் முன்னமே சொன்னேன் பகுதியை வைத்து விட்டு மீதத்தை எடுத்துக் கொள் என்று. பிறகு பகுதியிலும் பகுதி வை என்றேன். ஆசை விட்டதா? ஒன்றைத் தெரிந்து கொள். இன்றைய விதிப்படி அந்த பெண்ணுக்குத்தான் இந்த புதையல் போய் சேர வேண்டும். அதுவும் உன் மூலம் போக வேண்டும் என்பதே விதி. என்றாலும் நீ தூக்கி செல்வதற்காக உனக்கு சுமை கூலி தர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு உன் விதியில் இடம் இல்லை என்றாலும் என் வார்த்தைகளால் உன் மனதை மாற்றலாம் என்று ஆசைப்பட்டுத்தான் அவ்வாறெல்லாம் கூறினேன். கெஞ்சினேன். ஆனால் விதி உன் மதிக்குள் அமர்ந்து ஆசை எனும் அசுரனைப் புகுத்தி அனைத்தையுமே உனக்கே என்று வைத்துக் கொள்ள செய்தது. அனைத்தும் அந்தப் பெண்மணிக்குதான் போய் சேர வேண்டும் என்பது எனக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது என்பதே எமது விதி. இப்பொழுது நாலே நாலு வைத்தாயல்லவா? அதை மட்டும் எடுத்துக் கொள். புரிந்துகொள் யாருக்கோ எனும் பொழுது உன் கை சுருங்குகிறது அல்லவா? தரும் பொழுது தாராளமாக கொடுத்தால் அதுவே வேறு வடிவில் உனக்கே மீண்டும் வந்து சேரும் என்று வனதேவதை கூற வேறு வழியில்லாமல் அந்த நாலு பருப்புகளை மட்டும் அவன் எடுத்து சென்றான்.

இந்தக் கதையின் சம்பவங்களை விட்டுவிட்டு கருத்தை மட்டும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பிறருக்கு தரும் பொழுது தாராளமாக இருந்தால் தனக்கு வரும் பொழுதும் அது தாராளமாகவே இருக்கும். எனவே பிறருக்கு தருவதெல்லாம் தனக்குத்தானே மறைமுகமாகத் தருவதுதான் என்ற கருத்துதான் இக்கதையின் மையக்கருத்தாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 277

தர்மத்தின் சிறப்பை உணர்த்தும் காதை (கதை) ஒன்று கூறுங்கள் ஐயனே

எத்தனையோ காதைகளை (கதைகளை) முன்னர் கூறியிருக்கிறோம் அப்பா. கூறியது கூறல் பலருக்கு இகழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அந்தக் காதை (கதை) முக்கியமல்ல. அதில் உள்ள கருத்துதான் முக்கியம் என்பதற்காக மீண்டும் கூறுகிறோம். இதுவும் முற்காலத்திலே நடந்த நிகழ்வுதான். கொடுப்பதில் அளவு பார்க்காமல் தாராளமாக இருந்தால் அது பிறருக்கு கொடுப்பதல்ல (மறைமுகமாக) தனக்குதானே கொடுப்பது போல என்ற தத்துவத்தை புரிய வைக்கவே இந்த காதையை (கதையை) மீண்டும் நினைவூட்டுகிறோம்.

ஒரு காலத்திலே பல்வேறுவிதமான பணிகளை செய்யக் கூடிய மனிதர்கள் இருக்க அவர்களில் இல்லங்களை பழுதுபார்க்கும் ஒருவன் இருந்தான். ஜாதி பேதங்கள் கடுமையாக இருந்த காலமது. சில நாட்களாக பணியில்லாமல் இருந்த அவன் பக்கத்து ஊருக்கு பணி தேடுவதற்காக புறப்பட்டான். செல்லும் வழியில் ஒரு வனம் (காடு). அந்த வனத்தை கடந்து அவன் போகும் பொழுது மகனே வா என்று அன்பொழுக யாரோ அழைப்பது போல் அவனுக்குத் தோன்றுகிறது. யார் நீ? எனக்கு பயமாக இருக்கிறது. ஓர் உருவத்தையும் இங்கு காண முடியவில்லையே? என்றான் மனிதன். அச்சம் வேண்டாம் மகனே ஒரு காரியத்தின் பொருட்டுதான் உன்னை அழைத்தேன். உன் நீண்ட கால வறுமையும் நீங்கிவிடும் என்றது அக்குரல். யார் என்னிடம் பேசிக் கொண்டிருப்பது? என்றான் மனிதன். நான் வனதேவதை. நான் உன் கண்ணுக்கு தெரியமாட்டேன். ஆனால் நான் சொல்வதை நீ செய்தே ஆக வேண்டும். ஏதும் குழப்பமில்லை. நான் சொல்வதை மட்டும் கேள். சரி சொல் என்றான் மனிதன். இதொ இந்த ஆலயத்தின் வடகிழக்கு மூலையிலே ஒரு அற்புதமான மணம் பரப்பும் பாரிஜாத மரம் இருக்கிறது. அதிலுள்ள மலர்களை பறித்து இங்குள்ள என் ஐயன் முக்கண்ணனுக்கு (சிவபெருமான்) சாற்றி வணங்கிவிட்டு அம்மரத்தின் பக்கத்தில் இத்தனை தூரம் குழி தொண்டு என்று வனதேவதை கூற இவனும் பவ்யமாக அவ்வாறே செய்கிறான். அங்கே ஏராளமான தங்கத் துவர்கள் (துவரம் பருப்பு) இருந்தன. இதை பார்த்தவுடன் அந்த மனிதனுக்கு ஆசை பொங்கி விட்டது. எல்லாவற்றையும் எடுத்து தன்னிடம் உள்ள ஒரு கோணிப்பையிலே போட்டு முடிக்கும் பொழுது வனதேவதை குறுக்கிட்டது. மகனே அவசரப்படாதே. அத்தனையையும் எடுத்துக் கொள்ளாதே. அது உனக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில் ஒரு சிறிய பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அங்கேயே வைத்துவிடு. நான் காரணமாகத்தான் கூறுகிறேன். முழுவதையும் எடுத்துக் கொள்ள உன் விதி இடம் தரவில்லை என்று வனதேவதை கூற அதெல்லாம் முடியாது. எனக்கென்று காட்டினாய். இப்பொழுது மாற்றிப் பேசினால் என்ன பொருள் முழுவதும் எனக்கே சொந்தம் என்றான் மனிதன். வேண்டாமப்பா பகுதியாவது வைத்துவிடு. முடியாது. வேண்டாம் மகனே கால் பகுதியையாவது மீதம் வை. ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன” என்றது வனதேவதை. அதெல்லாம் முடியாது என்றான் மனிதன். மீண்டும் வனதேவதை பலமுறை கெஞ்ச என்ன இது? உன் தொல்லை அதிகமாகி விட்டதே? என்று அலுத்துக் கொண்டே நான்கே நான்கு கனகப்பருப்பை மட்டும் மீதம் வைத்து விட்டு மற்றவற்றையெல்லாம் மூடை கட்டி அந்த வனதேவதைக்கு நன்றி கூட சொல்லாமல் வனத்தை (காட்டை) விட்டு வெளியேறுகிறான்.

ஏதாவது பணி கிடைத்தால் அந்த பணியையும் செய்து அதில் வரும் தனத்தையும் பெறலாமே? என்ற பேராசையோடு ஓர் ஊரை அடைகிறான். அந்த ஊரிலே ஒரு பெண்ணின் வீட்டு மேல்விதானம் சிதிலம் அடைந்திருந்தது. ஓடுகள் அலங்கோலமாக இருந்தது. அந்த பெண்மணி இவனிடம். அப்பா என் வீட்டு ஓடுகளை எல்லாம் சரி செய்து தருவாயா? என்று கேட்க அது எனக்கு கை வந்த கலை. செய்து தருகிறேன். அதற்கு எவ்வளவு தனம் தருவீர்கள்? என்று இம்மனிதன் கேட்க அப்பெண்மணி ஒரு தொகையைக் கூற இந்த பெண்மணி குறைவாகத்தான் சொல்கிறாள். என்றாலும் கிடைத்தவரை இலாபம்தானே? என்று எண்ணி மூடையை ஓரமாக வைத்துவிட்டு மேலே ஏற முற்படுகிறான். அந்த மூடையைப் பார்த்த அப்பெண்மணி இது என்னப்பா மூடை? என்று கேட்க அது ஒன்றுமில்லை தாயே என் மனைவி சமையலுக்கு பருப்பு வாங்கி வரும்படி சொன்னாள். சந்தையிலே வாங்கிக் கொண்டு போகிறேன் என்றபடியே மேலேறி ஓடுகளை சரிசெய்யும் பணிகளில் இறங்குகிறான். அப்பெண்மணி வீட்டின் உள்ளே சென்று சமையல் செய்யத் துவங்குகிறாள். அப்போது தான் பருப்பு இல்லை என்று என்பது நினைவிற்கு வருகிறது. உடனடியாக அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. இதோ இவன்தான் பருப்பு மூடை வைத்திருக்கிறானே? இதிலிருந்து சிறிது எடுத்துக் கொள்வோம். அதற்குரிய தனத்தை மாலையிலே சேர்த்துக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்து அப்பா உன் மூடையிலிருந்து சிறிது பருப்பு எடுத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்கிறாள். வேலை மும்முரத்தில் இருந்தவனுக்கு இப்பெண்மணி கேட்டது காதில் விழவேயில்லை. சரி பிறகு இவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று மூடையை அந்தப் பெண்மணி திறந்து பார்க்கிறாள். உள்ளே கனக துவரம் பருப்புகள். ஆச்சிரியம் மேலிட அப்பா எத்தனை தங்கம்? என்று எண்ணுகிறாள். வழக்கம் போல் அங்கே அவளுக்கு அசுர புத்தி தலை தூக்குகிறது. துவரம் பருப்பு என்று சொல்லி இவன் நம்மை ஏமாற்றி விட்டானே? என்று எண்ணியவள் சூழ்ச்சியாக அந்த கனக பருப்புகளை எல்லாம் வேறு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு உண்மையான பருப்பை வாங்கிக் கொட்டி மூடையாக மூடி மீண்டும் அதே இடத்திலேயே வைத்து விடுகிறாள்.

அந்த மனிதன் ஓட்டு வேலை முடிந்ததும் கூலியைப் பெற்றுக் கொண்டு மூடையை எடுத்துக் கொண்டு செல்கிறான். திடீரென்று அவனுக்கு ஒரு நப்பாசை. அந்த வனதேவதையின் ஆலயத்திற்கு அருகே வந்தவுடன் அந்த மூடையை திறந்து பார்க்கிறான். உள்ளே எல்லாம் பருப்பாக இருக்கிறது. அவனுக்கு ஒரே அதிர்ச்சி. ஆஹா அந்தப் பெண்மணி நம்மை நன்றாக ஏமாற்றி விட்டாள். திரும்பி சென்று அவளிடம் கேட்பதானால் எந்த ஆதாரத்தை வைத்துக் கேட்பது?. உண்மையையும் சொல்ல முடியாதே? என்று வேதனைப்பட்டு அழத் தொடங்கினான். அப்பொழுது அந்த வனதேவதையின் குரல் கேட்டது. மகனே ஏனப்பா அழுகிறாய்? தாயே கொடுப்பது போல் கொடுத்து மீண்டும் அத்தனையும் பறித்துக் கொண்டாயே? நாங்கள் மனிதர்கள் மோசக்காரர்கள் ஒத்துக் கொள்கிறோம். தேவதை வர்க்கமான நீ இப்படி செய்யலாமா? இது நியாயமா? என்று அம்மனிதன் கேட்க மகனே அதற்குத்தான் முன்னமே சொன்னேன் பகுதியை வைத்து விட்டு மீதத்தை எடுத்துக் கொள் என்று. பிறகு பகுதியிலும் பகுதி வை என்றேன். ஆசை விட்டதா? ஒன்றைத் தெரிந்து கொள். இன்றைய விதிப்படி அந்த பெண்ணுக்குத்தான் இந்த புதையல் போய் சேர வேண்டும். அதுவும் உன் மூலம் போக வேண்டும் என்பதே விதி. என்றாலும் நீ தூக்கி செல்வதற்காக உனக்கு சுமை கூலி தர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு உன் விதியில் இடம் இல்லை என்றாலும் என் வார்த்தைகளால் உன் மனதை மாற்றலாம் என்று ஆசைப்பட்டுத்தான் அவ்வாறெல்லாம் கூறினேன். கெஞ்சினேன். ஆனால் விதி உன் மதிக்குள் அமர்ந்து ஆசை எனும் அசுரனைப் புகுத்தி அனைத்தையுமே உனக்கே என்று வைத்துக் கொள்ள செய்தது. அனைத்தும் அந்தப் பெண்மணிக்குதான் போய் சேர வேண்டும் என்பது எனக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது என்பதே எமது விதி. இப்பொழுது நாலே நாலு வைத்தாயல்லவா? அதை மட்டும் எடுத்துக் கொள். புரிந்துகொள் யாருக்கோ எனும் பொழுது உன் கை சுருங்குகிறது அல்லவா? தரும் பொழுது தாராளமாக கொடுத்தால் அதுவே வேறு வடிவில் உனக்கே மீண்டும் வந்து சேரும் என்று வனதேவதை கூற வேறு வழியில்லாமல் அந்த நாலு பருப்புகளை மட்டும் அவன் எடுத்து சென்றான்.

இந்தக் காதையின் (கதையின்) சம்பவங்களை விட்டுவிட்டு கருத்தை மட்டும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பிறருக்கு தரும் பொழுது தாராளமாக இருந்தால் தனக்கு வரும் பொழுதும் அது தாராளமாகவே இருக்கும். எனவே பிறருக்கு தருவதெல்லாம் தனக்குத்தானே மறைமுகமாகத் தருவதுதான் என்ற கருத்துதான் இக்கதையின் மையக்கருத்தாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 276

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பரந்துபட்ட உலகமும் இந்த பேரண்டமும் நீக்கமற நிறைந்துள்ள அனைத்தும் பரம் பொருள்தான் என்பதை ஒரு மனிதன் நன்றாக உள்வாங்கி திடமாக நம்பி எல்லாம் அவன் செயல் என்று தன்னை பரிசுத்த மனிதனாக மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டால் அப்படி மாற்றிக் கொள்கின்ற மனிதனுக்கு அப்படி மாற்றிக் கொண்டு உண்மையாக வாழ வேண்டும் உண்மை வழியில் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கு அவன் எங்கிருந்தாலும் இறைவன் எம்போன்ற மகான்கள் மூலமாகவோ வேறு வழி மூலமாகவோ வழிகாட்டிக் கொண்டேயிருப்பார் அப்பா. அதுபோல் ஆத்மாக்களுக்கு யாங்களும் இறைவனருளால் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். இங்கு (குடிலுக்கு) வந்துதான் அவன் வழிமுறைகளைப் பெற வேண்டும் என்பதல்ல. நாங்கள் எத்தனையோ வழி முறைகளை வைத்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் ஓலை (ஜீவநாடி) மூலம் பேசுவது. வேளை வரும் பொழுது வேறு வேறு மார்க்கங்களையும் நாங்கள் (சித்தர்கள்) கடைபிடிப்போம். விதியிலே ஒரு மனிதனுக்கு அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும் கூட நல்லவனாக இருந்து விட்ட அல்லது இருக்கின்ற காரணத்தினாலேயே இறை தரிசனமோ அல்லது சித்தர்கள் தரிசனமோ கிடைக்க வேண்டும் என்பது இல்லை அல்லது ஓலை (ஜீவநாடி) மூலம்தான் சித்தர்களின் வாக்கை அறிந்து முன்னேற வேண்டும் என்ற நிலையும் இல்லை. வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. இதுகுறித்தும் பலமுறை கூறியிருக்கிறோம்.

இதுபோல் நிலையிலே எம்மைப் பொறுத்தவரை இங்கு வருபவர்களுக்கு பலமுறை உரைத்திருக்கிறோம். இதுபோல காலத்திலே பக்தி மார்க்கமும் பரிபூரண சரணாகதி தத்துவமும் அதோடு தக்க ஏழைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதும் அந்த தர்ம குணத்தை எப்படியாவது இறையிடம் போராடி பெற்று இன்னும் கூறப் போனால் மனித அறிவு ஏற்றுக் கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் நாங்கள் (சித்தர்கள்) கூறினாலும் அதில் உச்சகட்டமாக இங்கு வருபவர்கள் வெளியில் ஏளனம் செய்வது ருணம் (கடன்) பெற்று அறம் செய் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகின்ற கருத்தை அதுவும் எல்லோருக்கும் நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. சிலருக்கு சிலவற்றை மனதிலே வைத்து கூறுகிறோம். அந்த தர்மத்தை எவனொருவன் தன்முனைப்பு இல்லாமல் செய்கிறானோ அவனுக்கு ஏதும் கூற வேண்டியதே இல்லையப்பா. அந்த தர்மத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு எத்தனை இடர் எதிர்ப்பு சோதனை வேதனை வந்தாலும் நீ தர்மம் செய்தாயே? அவன் உன்னை நன்றாக ஏமாற்றி விட்டான். அவனைப் போன்ற ஏமாற்றுக்காரனுக்கெல்லாம் நீ ஏனப்பா உதவி செய்கிறாய்? என்று இன்னொருவன் வந்து குழப்பத்தை ஏற்படுத்தினாலும்கூட என் கடன் தர்மம் செய்து கிடப்பதே என்று எவன் தொடர்ந்து தர்ம வழியில் வருகிறானோ அவனுக்கு ஏதும் கூற வேண்டாம். இறையே அவனை வழி நடத்தும். அதைதான் நாங்களும் தர்மம் தர்மம் தர்மம் என்று பலருக்கும் பல முறை கூறுகிறோம். ஆனால் கேட்க விடவேண்டுமே அவனவன் கர்மம். இந்த ஜீவ அருள் ஓலை உண்மை. இதில் வாக்குகளைக் கூறுவது சித்தர்கள்தான் என்று நம்பக்கூடிய அனைவருக்குமே இந்த வாக்கு பொருந்துமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 275

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

யாம் கூறுகின்ற நங்கையை (பெண்ணை) மணக்க வேண்டும் என்று சிலர் எண்ணலாம். அப்பொழுதுதான் வாழ்க்கை மணக்கும் என்றும் எண்ணலாம். ஆனாலும் கூட விதியில் எது இடம் பெறுகிறதோ அதைதான் எப்பொழுதுமே மனிதன் நுகர இயலும். திருமணம் தொடர்பான கர்ம வினைகள் எத்தனையோ சிக்கலான கர்ம வினைகளைக் கொண்டிருக்கிறது. அது குறித்து ஆண்டாண்டு காலம் பாடம் எடுத்தாலும் கூட மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயம் இந்த களத்திர பாவம். எல்லா பாவங்களும் அப்படிதான் என்றாலும் களத்திர பாவம் என்பது மிகவும் நுட்பமானது. அதனால்தான் பல்வேறு தருணங்களிலே பல்வேறு விதமான திருமணங்கள் பொய்த்து போவதும் பல்வேறு திருமணங்கள் புறத் தோற்றத்திற்கு அவர்கள் ஒற்றுமையாக இருப்பது போல் தோன்றினாலும் உள்ளே நிம்மதியாக வாழாமல் இருப்பதுமாக இருக்கிறது. மனிதனின் பெருமளவு கர்மாக்கள் குறைகின்ற இடம் களத்திர பாவம். ஆன்மீகம் என்றாலே தற்சமயம் அது பலவகையான ஆன்மீகமாக மனிதனால் பார்க்கப்படுகிறது. இந்த ஜீவ அருள் ஓலையிலே (ஜீவநாடி) நாங்கள் (சித்தர்கள்) சுட்டிக் காட்டுகின்ற வழியானது மிக மிக ஞானியர் என்று மனிதர்களால் மதிக்கப்படுகின்ற ஞானியர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்படாத வழி முறையாகத்தான் இருக்கும். நீ கற்ற கற்கின்ற ஆன்மீக நூல்கள் நீ பார்க்கின்ற ஆன்மீக மனிதன் உன் செவியில் விழுகின்ற ஆன்ம செய்திகள் இது வரை கற்ற பல்வேறு ஆன்மீக விஷயங்கள் எல்லாம் கூட நாங்கள் (சித்தர்கள்) காட்டுகின்ற வழியிலே முரணாகத் தோன்றும்.

எமது வழி முறையில் வர வேண்டும் என்று நீயோ உன்னொத்து சிலரோ எண்ணலாம். நாங்கள் (சித்தர்கள்) வாழ்த்துகிறோம். ஆனால் அதனால் மிகப்பெரிய உலகியல் நன்மையோ அல்லது உளவியல் நன்மையோ வந்து விடாதப்பா. அதிக துன்பங்களும் அவமானங்களும் வரும். அதை சகித்துக் கொள்கின்ற பொறுமையும் சகிப்புத் தன்மையும் இருந்தால் எமது வழியில் நீயும் வரலாம். யாங்கள் (சித்தர்கள்) தடுக்கவில்லை. வந்து வெற்றி பெற நல்லாசி கூறுகிறோம். யாம் பலமுறை கூறியிருக்கிறோம். நாங்கள் (சித்தர்கள்) பாரபட்சம் பார்ப்பதில்லை என்று. எல்லோரும் இறைவனுக்கும் எமக்கும் சேய்கள்தான் (பிள்ளைகள்தான்). ஆனாலும் கூட இறைவனுக்கும் மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? சித்தர்களுக்கும் மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? அந்த மாயத்திரை எது? அது எப்பொழுது அகலும்? தீவிர பற்று தன் பிள்ளைகள் மேல் கொண்டிருக்கின்ற பாசம் அந்த பாசத்தின் காரணமாக ஏற்படுகின்ற தடுமாற்றம். அந்த தடுமாற்றத்தில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும் கூட தவறாக தெரியாத ஒரு நிலை. அதையே மற்றவர்கள் செய்தால் அது மிகப்பெரிய பஞ்சமாபாதகமாகத் தோன்றுவது. இவையெல்லாம் மாயையின் உச்சநிலை. எனவே சுயநலமும் தன்முனைப்பும் தீவிர பாசமும் ஆசையும் பற்றும் எந்த மனிதனுக்குள்ளும் எத்தனை காலம் இருந்தாலும் இறைவன் அவன் பக்கத்தில் அமர்ந்தாலும் அவனால் புரிந்து கொள்ள முடியாது.

சுலோகம் -155

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-36

அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான். கிருஷ்ணா இந்த மனிதன் தான் விரும்பா விட்டாலும் பலவந்தமாக தூண்டப்பட்டவன் போல எதனால் ஏவப்பட்டு பாவத்தை சேர்க்கிறான்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஒரு மனிதன் பாவம் செய்வதற்கு விருப்பப்படுவது கிடையாது. ஆனாலும் ஒரு அரசனின் கட்டளைக்கு அடிபணியும் சேவகன் போல ஐந்து புலன்களின் கட்டளைக்கு அடிபணிந்து ஒரு மனிதன் பாவம் செய்து விடுகிறான். ஏன் இவ்வாறு நடக்கிறது? என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 274

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

எல்லாம் விதிதான் என்றால் மதிக்கு என்ன வேலை இருக்கிறது? என்றெல்லாம் சிந்திக்கின்ற மனிதன் எந்த இடத்தில் மதியை வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் மதியை வைக்காமல் வாழ்வதுதான் விதி அங்கே வெல்வதற்கு வழியாகப் போய் விடுகிறது. விதியை மீறி எத்தனையோ நல்ல விஷயங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்விலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏதாவது ஒரு மகானின் மூலம் இறைவன் அதனை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். ஆயினும் பெரும்பாலான பொழுதுகளில் மனிதர்கள் அதனை உணர்வதில்லை. மிகவும் தரம் தாழ்ந்த ஆத்மாவிடம் அதே நிலைக்கு இறங்கி ஒரு மகான் வாக்கு உரைப்பது என்பது கடினம்தான் இருந்தாலும் அதனையும் நாங்கள் (சித்தர்கள்) செய்திருக்கிறோம். எப்படியாவது அந்த ஆத்மா மேலேறி வரவேண்டுமே? அவன் போக்கில் சென்றாவது மேலேற்றலாமே? என்றுதான். ஆனாலும் வழக்கம் போல் விதி வென்று மகான்களின் போதனைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன.

இறைவனின் கருணையாலே இந்த ஜீவ அருள் ஓலையிலே வாக்கு இல்லை அல்லது தற்சமயம் வாக்கு பகிர்வதில்லை அல்லது சிலருக்கு வாக்கு கூறுகிறார்கள். பலருக்கு கூறுவதில்லை அல்லது யார் அதிகம் தனம் வைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் வாக்கு ஓதுகின்ற நிலை இருக்கிறது என்றெல்லாம் தத்தம் மனதிற்கு ஏற்ப அந்த மனம் எந்தளவிற்கு கீழ்மைபட்டிருக்கிறதோ அந்தளவிற்கு எண்ணுகிறார்கள். ஒருவரின் சிந்தனையும் செயலும் சொல்லும் தரம் தாழ்ந்து இருக்க இருக்க அவன் இன்னும் பாவங்களை தொலைக்கவில்லை என்பதுதான் பொருள். பாவங்கள் பெருமளவு குறைந்த ஆத்மா மேலும் பாவங்களை செய்ய அஞ்சும் ஆத்மா ஒரு தீயதை பிறர் செய்ய பார்த்தாலும்கூட அவன் அவ்வாறு செய்திருக்க மாட்டான். ஏதோ ஒரு சந்தர்ப்பம் அல்லது வேறு ஏதோ ஒரு சூழல் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது என்று அதைக் கூட ஆக்கப் பூர்வமாகத்தான் பார்க்கும். ஆனால் பாவங்கள் நிரம்பியுள்ள ஒரு ஆத்மா பிறர் செய்கின்ற நற்செயல்களைக்கூட குதர்க்கமாகத்தான் பார்க்க எண்ணும். நல்லவர்களை பார்த்தாலே பாவ ஆத்மாக்களுக்கு தேகமெங்கும் எரிச்சல் வருவது போல் இருக்கும்.

File written by Adobe Photoshop? 4.0

திருமூவலூர் கோவில்

மூலவர் புண்ணாகீஸ்வரர் வேறு பெயர்கள் மார்க்கசகாயேசுவரர் வழித்துணைநாதர் வழிகாட்டி வள்ளல். அம்பாள் மங்களநாயகி சவுந்தர நாயகி. இத்தலத்தில் சவுந்தரநாயகி அம்பாளுக்கு தனி சன்னிதி உள்ளது. இச்சன்னிதியின் கருவறைச் சுவரில் வெளிப் புறத்தில் மேற்புறமாக பல அரிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அன்னையுடன் மங்களாம்பிகை என்ற அம்பாளுக்கும் தெற்கு நோக்கிய தனி சன்னிதி அமைந்துள்ளது. அன்னை இருவரின் வடிவங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. அமாவாசை தோறும் சவுந்தரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும் லலிதா திரி சடையும் சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகிறது. ஆலய தல விருட்சம் புன்னை மரம். தீர்த்தம் சந்திர புஷ்கரணி துர்கா புஷ்கரணி மற்றும் உபமன்யு முனிவர் வழிபட்ட உபமன்யு கூபம் என்னும் கிணறு காவிரி நதியில் அமைந்துள்ள பிப்பிலர் தீர்த்த கட்டம் ஆகியவைகளாகும். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் ஆலயத்தில் ராஜகோபுரத்திற்கு வெளிப்புறம் விநாயகர் முருகன் சன்னிதிகள் உள்ளன. உட்புறம் உயர்ந்த கொடி மரமும் நான்கு திக்குகளை நோக்கும் விதமாக வேத நந்திகளை நான்கு பக்கமும் கொண்ட பலிபீடமும் அமைந்துள்ளது. இதுபோன்ற பலிபீட அமைப்பு வேறெந்த ஆலயத்திலும் இல்லை. இறைவனை நோக்கியவாறு அதிகார நந்தி அருள்பாலிக்கிறார்.

தாரகாசுரனின் மைந்தர்களான தாருகாட்சகன் கமலாட்சகன் வித்யுன்மாலி ஆகிய மூவரும் தந்தையைப் போலவே கடுந்தவம் செய்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றனர். அந்த அசுரர்கள் மூவருக்கும் மூன்று பறக்கும் நகரங்களை பிரம்மன் அளித்தார். அந்தரத்தில் பறக்கும் வல்லமை கொண்ட அந்த திரிபுரங்களுக்குள்ளும் சோலைகள் சிவாலயங்கள் குளங்கள் போன்ற வசதிகள் இருந்தன. கற்பக விருட்சமும் காமதேனும் அங்கிருந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றின. தேவதச்சனான மயனைக் கொண்டு தாருகாட்சகன் பொன்னாலான கோட்டையையும் கமலாட்சகன் வெள்ளிக் கோட்டையையும் வித்யுன்மாலி இரும்புக் கோட்டையையும் தங்கள் நகரில் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர் களின் மூன்று நகரங்களும் ஒளியுடன் பிரகாசித்தன. ஆயினும் அவை அந்தரத்தில் விரைந்து பறக்கும் போது பல ஜீவராசிகள் அழிந்தன நட்சத்திரங்கள் உதிர்ந்தன. பூமி சொர்க்கம் முதலியவற்றில் இந்த நகரங்கள் நிலைபெறும் போது தேவர்கள் மனிதர்கள் முனிவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாளடைவில் அசுரர்கள் தங்கள் பிறவிக் குணத்தை காட்டத் தொடங்கினர். அவர்கள் தங்கள் சக்தியை பயன்படுத்தி தேவர்கள் முனிவர்கள் மனிதர்களுக்கு துன்பங்களை இழைத்தனர். இதனால் அனைவரும் அஞ்சி நடுங்கினார்கள். ஒரு கட்டத்தில் அனைவரும் பிரம்மா விஷ்ணு இருவரிடமும் சென்று தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். அவர்கள் தேவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானை சரணடைந்தனர்.

சிவபெருமான் அந்த அசுரர்களை அழிக்க ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலில் பாதியை அளித்தால் மட்டுமே முடியும் என்று கூறினார். இதற்கு தேவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். அதன்படி அனைத்து சக்திகளையும் திரட்டி வைதீகத் தேரை உருவாக்கப்பட்டது. அதனை பிரம்மதேவன் ஓட்ட முடிவானது. மேரு மலையை வில்லாக்கி வாசுகி என்ற நாகத்தை நாணாக்கி திருமாலை அம்பின் தண்டாக்கினர். வாயுவை அம்பின் அடிப்பாகமாகவும் அக்னியை அம்பின் நுனிப்பாகமாகவும் செய்தனர். இப்படி சக்தி வாய்ந்த வில் அம்பை தன் கையில் ஏந்திய சிவன் அசுரர்களின் கோட்டையை நோக்கி குறி வைத்தார். அப்போது நம்முடைய பங்களிப்பு இல்லாமல் இது நடக்காது என பிரம்மாவும் விஷ்ணுவும் கர்வம் கொண்டனர். அதை தன் ஞானக் கண்ணால் உணர்ந்த சிவன் சத்தமாக சிரித்தார். அந்த சிரிப்பே ஆயுதமாக மாறி எவரது துணையும் இன்றி மூன்று அசுரர்களையும் கோட்டையையும் எரித்து சாம்பலாக்கியது. அசுரர்களும் மாண்டுபோனார்கள். இதைக் கண்ட திருமாலும் பிரம்மனும் தங்கள் கர்வத்தை கைவிட்டனர். இருப்பினும் அவர்கள் செய்த சிவ நிந்தனையால் பாவம் வந்து சேர்ந்தது. அந்த பாவத்தைப் போக்க திருமாலும் பிரம்மாவும் சிவனிடமே வழிகாட்டும்படி வந்து வேண்டி நின்றனர். இருவரையும் பார்த்த சிவன் காவிரிக் கரையில் புன்னாகவனம் எனப்படும் புன்னை மரக்காட்டில் ஒரு மரத்தடியில் லிங்க ரூபமாய் நான் இருக்கிறேன். அங்கு வந்து என்னை பூஜித்து விமோசனம் பெறுங்கள் என்று அருளினார். அதன்படி திருமாலும் பிரம்மனும் இத்தலம் வந்து லிங்கத் திருமேனியைத் தேடினர். அப்போது வேடம் உருவில் வந்த சிவபெருமான் அவர்களை எதிர்கொண்டு புன்னாக வனத்திற்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த லிங்கத் திருமேனியைக் காட்டி மறைந்தார்.

பிரம்மனும் விஷ்ணுவும் மீண்டும் ருத்ரமூர்த்தியை வேண்டி தாங்களே லிங்கத்திற்கு பூஜை செய்து காட்டியருள வேண்டும் என்றனர். அதன்படி சிவனே வந்து இத்தல லிங்கத் திருமேனியை பூஜித்து வழிபடுவதற்கான வழியைக் காட்டியருளினார். இப்படி வழி (மார்க்கம்) காட்டி பூஜையையும் உடனிருந்து செய்தமையால் (சகாயம்) மார்க்கசகாயேசுவரர் என்று அழைக்கப்பட்டார். இதையே அழகுத் தமிழில் வழித்துணைநாதர் வழிகாட்டி வள்ளல் என்று பெயர் பெற்றார். சிவன் பிரம்மன் திருமால் ஆகிய மூவரும் புண்ணாகீஸ்வரரை பூசித்ததால் இத்தலத்திற்கு மூவரூர் (மூவர் ஊர்) என்று பெயர் வந்தது. அதுவே நாளடைவில் மூவலூர் என்று மாறிப்போனது.

மகிஷாசுரன் என்ற அசுரன் தவம் செய்து பெண்கள் எல்லாரும் சக்தியற்றவர்கள் என்ற எண்ணத்தால் எந்த ஆண்களாலும் தன் உயிருக்கு ஆபத்து வரக் கூடாது என்ற வரத்தை சிவபெருமானிடம் கேட்டுப் பெற்றான். பின்னர் தேவர்களுக்கும் மக்களுக்கும் தீராத துயரத்தைத் தந்தான். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். மகிஷாசுரனை வதம் செய்ய பெண் சக்தியால் மட்டுமே இயலும் என்பதை உணர்ந்த சிவன் அன்னை பார்வதியிடம் செல்லுமாறு கூறினார். அதன்படி தேவர்கள் அனைவரும் அன்னையிடம் சென்று முறையிட்டனர். அதற்கு செவிமடுத்த அன்னை துர்க்கையாக வடிவம் பூண்டு அசுரனை வதம் செய்து அழித்தாள். பிறகு தனது கோர முகம் அழகிய முகமாக மாற மூவலூரில் தீர்த்தம் உண்டாக்கி நீராடி இறைவனை வழிபட்டு வந்தாள். அதன் பயனால் அழகிய முகத்தையும் திருவுருவத்தையும் பெற்றாள். அதோடு மீண்டும் தவம் இயற்றி இறைவனை மணந்தார்.

இக்கோவில் 10 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இத்தலத்தில் 1925 ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் எட்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அந்த கல்வெட்டுகளில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூவலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிரம சோழ தேவன் காலம் கிபி1120 மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் காலம் கிபி1189 மற்றும் மூன்றாம் ராஜேந்திர சோழன் கிபி 1225 காலக் கல்வெட்டுகளில் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கொடை அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட கொடை பூஜைகள் செய்ய வழங்கப்பட்ட பொற் காசுகள் இறைவன் இறைவிக்கு வழங்கிய ஆபரணம் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. இறைவன் மூவலூர் உடைய நாயனார் என்று அழைக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டில் இருக்கிறது.
மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு கிழக்கே திருவிளநகர் துறைகாட்டும் வள்ளல். தெற்கே பெருஞ்சேரியில் மொழிகாட்டும் வள்ளல். மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல். வடக்கே உத்திர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளல் எனப்படும் நான்கு திசை வள்ளல்களில் ஒருவராகவும் இத்தல இறைவன் திகழ்கிறார். இத்தலத்து இறைவனை பிரம்மா விஷ்ணு துர்க்கை சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். மகா சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நவ நாகங்களும் ரத சப்தமியில் சப்தமாதர்களும் வழிபட்டுப் பேறுபெற்றனர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 273

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இந்த மனிதர்களின் உலக வாழ்வு எக்காலத்திலும் என்றென்றும் விதி வசம்தான் என்பது எம் போன்ற மகான்கள் அறிந்த ஒன்றுதான். இவைகளைத் தாண்டி மனிதர்களை ஓரளவு மெல்ல மெல்ல மேலேற்ற கடைத்தேற்ற கரையேற்ற இறைவழி அறவழி அழைத்து செல்லவே மகான்கள் காலகாலம் போராடுகிறார்கள். ஆயினும்கூட யாம் அடிக்கடி இயம்புவது போல பெரும்பாலான பொழுதுகளில் விதிதான் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறது. இதுபோல் சராசரியாகவே வாழ்ந்து உண்டு உறங்கி ஏதும் தெரியாமல் வெறும் புலன் கவர்ச்சிக்கு மயங்கி வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகளைத் தாண்டி இறை என்ற ஒன்று இருக்கிறது என்று நம்புகின்ற கூட்டம் ஒருபுறம். இந்த இரண்டையும் தாண்டி ஒரு குருவை நாடுவோம். குருவை தொட்டு தொட்டு மேலேறுவோம் என்று வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகள் எல்லாவற்றையும் தாண்டி ஓலைகளிலே சித்தர்கள் வாக்கு உரைக்கிறார்கள். அதனைக் கேட்டு வாழ்க்கையின் துன்பங்களை நீக்கிக் கொள்வோம். அதோடு உண்மையான ஞான வாழ்வையும் அறிந்து கொள்வோம் என்று இருக்கின்ற கூட்டம் ஒருபுறம். எல்லாவற்றையும்விட இதில் எந்த நிலையில் ஒரு மனிதன் நின்றாலும் அவன் மதியில் விதி அமர்ந்து கொண்டு ஆட்டுவிக்கிறது என்பது உண்மை. அந்த விதியை மாற்றத்தான் யாங்களும் (சித்தர்களும்) எங்கள் நிலையிலிருந்து மிக மிகக் கீழே இறங்கி பல்வேறு தருணங்களில் பல்வேறு விதமான மனிதர்களுக்கு இங்கு ஜீவ அருள் ஓலையிலே (ஜீவநாடி) ஏறத்தாழ 9 ஆண்டுகாலம் எந்தவிதமான (பாவ ஆத்மா புண்ணிய ஆத்மா என்ற) கணக்கினையும் பார்க்காமல் இன்னும் கூறப்போனால் புண்ணியம் அதிகம் செய்த செய்கின்ற ஆத்மாக்களை விட பாவங்களை அதிகம் சுமந்து கொண்டிருக்கின்ற ஆத்மாக்களுக்கும் சேர்த்து வாக்குகளை விதவிதமாக உரைத்திருக்கிறோம். ஆயினும் கூட எப்படி ஒரு செவிடன் செவியிலே எதைக்கூறினாலும் ஒன்றும் நுழையாதோ அதைப் போலதான் நடந்து கொண்டிருக்கிறது.

இயல்பாக சாத்வீகமாக எதையும் நல்லவிதமாக பார்க்கக் கூடிய தன்முனைப்பு குறைந்த ஆத்மாக்களை கரையேற்றுவது என்பது எளிது. அதாவது ஏற்கனவே நன்றாக படிக்கக்கூடிய மாணாக்களை மேலும் நன்றாக படிக்க வைப்பது போல. ஆனால் சற்றும் கல்வி ஏறாமல் திணறிக் கொண்டு இருக்கக் கூடிய கல்வி என்றாலே வெறுக்கக் கூடிய ஒரு மாணவனை மேலேற்றுவதுதான் ஆசிரியருக்கு சவாலாக இருக்கும். அந்த வழிமுறையையும் நாங்கள் கையாண்டு இங்கு வருகின்ற பலருக்கு தராதரம் பார்க்காமல் நாங்கள் வாக்கைக் கூறியது உண்டு. ஆயினும் கூட வழக்கம் போல் விதி வென்று அவர்கள் (விதிப்படி) வாழத்தான் அவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது. இறைவன் தந்த அறிவை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் பயன்படுத்தாத மனிதன் எந்த இடத்தில் பயன்படுத்தக் கூடாதோ அந்த இடத்தில் பயன் படுத்துகிறான். சதாசர்வகாலம் மிருகவெறி கொண்டு அலைவதும் தன் முனைப்பும் ஆணவமும் கொண்டு அலைவதும் நல்ல புண்ணியம் செய்கின்ற ஆத்மாக்கள் மனம் நோக நடந்து கொள்வதும்தான் இங்கு வருகின்ற பெரும்பாலான ஆத்மாக்களின் இயல்பாக இருக்கிறது. கடும் சினமும் ஆணவமும் கட்டாயம் உலக வாழ்க்கையை மட்டுமல்ல மேலுலக வாழ்க்கை கூட தராது தடுத்து விடும் என்பதை உணரவில்லை. உணர்ந்தாலும் அதை பெரிதாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

சுலோகம் -154

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-35

நன்கு கடைபிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் குணக்குறைகள் இருந்தாலும் தன்னுடைய தர்மம் மிகவும் உயர்ந்தது. ஸ்வதர்மத்தைக் கடைபிடிப்பதில் இறப்பது மேன்மையை தரும். பிறருடைய தர்மம் பயத்தைக் விளைவிக்கும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அரசர்களுக்கு உண்டான தர்மம் என்றும் வியாபாரம் செய்பவர்களுக்கான தர்மம் என்றும் விவசாயம் செய்பவர்களுக்கான தர்மம் என்றும் ஒவ்வொரு தொழிலுக்கு உண்டான தர்மங்கள் பல இருக்கின்றன. அந்தந்த தொழிலை செய்பவர்கள் அந்தந்த தொழிலுக்கு உண்டான தர்மங்களை கடை பிடிக்க வேண்டும். பிறருடைய தொழிலுக்கான தர்மத்தை சிறந்ததாக இருக்கிறதே என்று தன் செய்யும் தொழிலுக்கு ஏற்ப பயன் படுத்தக் கூடாது. தன்னுடைய தொழிலுக்கு உண்டான தர்மத்தை கடைபிடிப்பதில் தன்னிடம் சில குணக்குறைகள் இருந்தாலும் தன் தொழிலுக்கான தர்மமே உயர்ந்தது. பிறர் செய்யும் தொழிலுக்கான தர்மத்தை கடைபிடித்தால் அதனால் பல பாவங்களை சேர்த்துக் கொள்ள வேண்டியது வரலாம். மேலும் தவறு செய்கிறோமோ என்ற பயத்தையும் உண்டு பண்டும். தன்னுடைய தொழில் தர்மத்தை விட்டு பிறர் செய்யும் தொழிலுக்கான தர்மம் சிறந்தது என்று தன் தர்மத்தை விடுவதை விட இறப்பதே மேன்மையை தரும்.