சுலோகம் -154

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-35

நன்கு கடைபிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் குணக்குறைகள் இருந்தாலும் தன்னுடைய தர்மம் மிகவும் உயர்ந்தது. ஸ்வதர்மத்தைக் கடைபிடிப்பதில் இறப்பது மேன்மையை தரும். பிறருடைய தர்மம் பயத்தைக் விளைவிக்கும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அரசர்களுக்கு உண்டான தர்மம் என்றும் வியாபாரம் செய்பவர்களுக்கான தர்மம் என்றும் விவசாயம் செய்பவர்களுக்கான தர்மம் என்றும் ஒவ்வொரு தொழிலுக்கு உண்டான தர்மங்கள் பல இருக்கின்றன. அந்தந்த தொழிலை செய்பவர்கள் அந்தந்த தொழிலுக்கு உண்டான தர்மங்களை கடை பிடிக்க வேண்டும். பிறருடைய தொழிலுக்கான தர்மத்தை சிறந்ததாக இருக்கிறதே என்று தன் செய்யும் தொழிலுக்கு ஏற்ப பயன் படுத்தக் கூடாது. தன்னுடைய தொழிலுக்கு உண்டான தர்மத்தை கடைபிடிப்பதில் தன்னிடம் சில குணக்குறைகள் இருந்தாலும் தன் தொழிலுக்கான தர்மமே உயர்ந்தது. பிறர் செய்யும் தொழிலுக்கான தர்மத்தை கடைபிடித்தால் அதனால் பல பாவங்களை சேர்த்துக் கொள்ள வேண்டியது வரலாம். மேலும் தவறு செய்கிறோமோ என்ற பயத்தையும் உண்டு பண்டும். தன்னுடைய தொழில் தர்மத்தை விட்டு பிறர் செய்யும் தொழிலுக்கான தர்மம் சிறந்தது என்று தன் தர்மத்தை விடுவதை விட இறப்பதே மேன்மையை தரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.