சுலோகம் -130

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-11

இந்த வேள்வியினால் அந்த தேவர்களை ஆராதிக்கக் கடவீர்கள். அந்த தேவர்கள் உங்களை கருதக் கடவார்கள். இவ்வாறு பரஸ்பரம் பாவனை செய்வதினால் நீங்கள் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் -129 இல் உள்ளபடி செய்கின்ற செயல்கள் அனைத்தையும் பரம் பொருளான இறைவனுக்கு அல்லது உங்கள் விருப்ப தெய்வத்திற்கோ அர்பணித்து அந்த செயலின் விளையும் ஏற்படும் நன்மை தீமைகளை அனைத்தையும் இறை செயலாக எண்ணிக் கொண்டு இருந்தால் இதுவே ஒரு வேள்வியாகும். இதன் வழியாகவே இறைவனை (இஷ்ட தெய்வம்) நீங்கள் ஆராதனை செய்தவர்கள் ஆவீர்கள். உங்களது ஆராதனைகளை பரம் பொருளான இறைவன் அல்லது உங்களது இஷ்ட தெய்வம் உங்களது ஆராதனைகளை ஏற்றுக் கொண்டு நன்மைகளை அளிப்பார்கள். இந்த முறைப்படி வாழ்க்கை முழுவதும் வாழ்ந்தால் உயர்ந்த நலத்தை அடைவது மட்டுமின்றி மோட்சத்தையும் அடையலாம் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.