சுலோகம் -123

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-4

கர்மங்கள் செய்ய ஆரம்பிக்காமல் இருப்பதாலேயே மனிதன் செயலற்ற நிலையை அடைவதில்லை. கர்மங்களை செய்யாமல் துறப்பதாலேயே சித்தியை அதாவது சாங்கிய யோகத்தை அடைவதில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கர்மங்கள் செய்தால்தானே பாவம் அல்லது புண்ணியம் வருகிறது. அதனை செய்யாமல் இருந்தால் எதுவுமே வராது அனைத்தையும் துறந்து அமைதியை அடைந்து ஞானத்தை பெற்று இறைவனை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் கர்மங்களை செய்ய ஆரம்பிக்காமல் இருந்தால் அமைதியையும் பெற முடியாது. இவர்கள் ஞான யோகத்தின் வழியாக இறைவனையும் அடைய முடியாது. ஏனெனில் இதனை செய்தால் இது கிடைக்கும் இதனை விட்டால் இது கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடன் கர்மங்களை துறப்பதினால் பலன் இல்லை என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.