சுலோகம் -160

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-41

ஆகவே அர்ஜூனா நீ முதலில் புலன்களை வசப்படுத்தி ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிக்கின்ற பெரும் பாவியான இந்த காமத்தை நிச்சயமாக வீறுடன் ஒழித்து விடு.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆசைகள் ஐந்து புலன்களின் வழியாக மனிதனை மயக்கி ஞானத்தையும் அந்த ஞானத்தை அடைய வேண்டிய வழிமுறையை அறிந்து கொள்ளும் அறிவையும் பெற முடியாதபடி தடுக்கிறது. ஆகவே எதனே செய்தாலும் பற்றில்லாமல் செய்து கர்ம யோகத்தில் ஈடுபட்டு முதலில் ஐந்து புலன்களை தன் வசப்படுத்த வேண்டும். அதன் வழியாக இந்த ஆசைகளை அழித்து விடு என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

கர்ம யோகத்தின் கடைபிடித்து ஆசைகளை அழித்து புலன்களை வசப்படுத்தி விட்டால் இறைவனை அடையக் கூடிய ஞானத்தையும் அந்த ஞானத்தை அடையகூடிய கூடிய வழிமுறையையும் அறிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.