காயத்ரி மந்திரம்

“அறிவோம் காயத்ரி மந்திரம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 10-12-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

தட்சன் ஆட்டுத் தலையுடன் உயிர்த்தெழுதல்

பிரம்மா தன்னுடைய படைப்புத் தொழிலினை நேர்த்தியாய் செய்ய தட்சனைப் படைத்தார். தட்சனின் மகளாக தாட்சாயிணியாக பிறந்து சிவனை திருமணம் செய்து கொண்டாள் பார்வதி. இதனால் சிவனின் மீது கொண்ட கோபத்தில் தட்சன் சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்கிறார். பலரும் எடுத்துரைத்தும் சிவபெருமானை அழைக்கவில்லை. சிவபெருமானை திருமணம் செய்து கொண்ட தாட்சாயிணி தந்தையிடம் சென்று நீதி கேட்கிறார். பின்பு விவாதம் முற்றி தன்னையே யாகத் தீயில் தன்னை அழித்துக் கொள்கிறார் தாட்சாயிணி. மனைவி இறந்தமைக்காக சிவபெருமான் சினங்கொண்டு வீரபத்திரர் என்பவரைத் தோற்றுவித்து தட்சனை அழிக்க உத்தரவிடுகிறார். வீரபத்திரர் யாகத்தில் கலந்து கொண்டிருப்பவர்களை அடித்து துவம்சம் செய்து இறுதியாக தட்சனின் தலையை வெட்டி யாக குண்டத்தில் போட்டு விடுகிறார். அதன் பின் யாகத்தில் கலந்து கொண்ட அனைவரும் இறைவனை சரணடைய இறுதியாக சிவபெருமான் தன் சினம் தணிந்ததும் வீரபத்திரரால் கொல்லப் பட்டவர்களை உயிர்ப்பித்தார். தலைகணம் கொண்ட தட்சனின் தலை குண்டத்தில் போட்டு எரிந்து விட்டதால் சிவபெருமான் அருளால் ஆட்டுத்தலையுடன் தட்சன் உயிர்த்தெழுந்தார். மகரிஷிகளின் ருத்ர ஜபத்துடன் மீண்டும் யாகம் தொடங்கியது. ஆட்டுத்தலை பெற்ற தட்சன் யாகத்தில் சிவனுக்கு முதல் அவிர் பாகம் தந்து அவரது பாதங்களை வணங்கி பூதகணங்களில் ஒருவனாகத் தன்னையும் ஏற்று அருள்புரியும்படி வரம் கேட்டான். சிவனும் அவ்வாறே வரம் தந்தருளினார். கர்நாடாக மாநிலம் கேலடியில் உள்ள ராமேஸ்வரர் கோவிலில் தட்சனின் சிற்பம் ஆட்டுத் தலையுடன் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 513

பட்டீஸ்வரம் திருச்சத்தி முற்றம் ஆலய திருவிழாவை பற்றி:

இறைவனின் அருளை கொண்டு அதுபோல் அங்கே எமது ரூபத்தை பல நாட்களாக பலரும் காணாத நிலையிலேயே இத்தருணம் அங்கே இந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தை வைத்து பூஜை நடப்பதை நாங்கள் வரவேற்றாலும் கூட பொதுவாக சித்தர்களை வணங்கு என்று ஒருபோதும் யாமோ வேறு சித்தர்களோ கூற மாட்டோம். அங்கே இறைவனுக்கே முன்னுரிமை. இருந்தாலும் அன்போடு செய்கின்ற அனைத்தையும் எமக்கு செய்தாலும் அதை இறைக்கு செய்ததாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மற்றபடி குறிப்பிட்ட நட்சத்திரம் தான் என் போன்ற மகான்களுக்கு உரியது என்ற கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. ஆண் பெண் கலப்பிலே பிறக்கக் கூடிய குழந்தைகளுக்குத்தான் நட்சத்திரம். அக்னியில் உருவாகக் கூடிய ரிஷிகளுக்கு ஏதடா நட்சத்திரம்? இருந்தாலும் ஏதாவது ஒரு தினத்தை தேர்ந்தெடுத்துச் செய்ய வேண்டும் என்பதற்காக செய்யப்படும் இதுபோன்ற நிகழ்வை நாங்கள் குறை கூறவில்லை. தொடர்ந்து ஒன்றுபட்ட உள்ளத்தோடு வேறு எந்த விதமான பங்கங்கள் இல்லாமல் பூஜைகள் செய்வதோடு இன்னும் புண்ணிய காரியங்களை அதிகரித்தால் எப்பொழுதுமே இறைவழிபாடு என்பது தர்ம சிந்தனையோடு இருக்கும் பொழுது தான் இறைவனின் பரிபூரண அருளை பெறத்தக்கதாகும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செய்ய நல்லாசிகள்.

ஐயனார் பெயர்கள்

1 அருஞ்சுனை காத்த அய்யனார்

2 அடைக்கலம் காத்த அய்யனார்

3 நீர்காத்த அய்யனார்

4 கரையடி காத்த அய்யனார்

5 சொரிமுத்து அய்யனார்

6 கலியணான்டி அய்யனார்

7 கருங்குளத்து அய்யனார்

8 குருந்துனடய அய்யனார்

9 இளம்பாளை அய்யனார்

10 கற்குவேல் அய்யனார்

11 கொண்னறயான்டி அய்யனார்

12 செண்பகமூர்த்தி அய்யனார்

13 திருவேட்டழகிய அய்யனார்

14 சமணர்மலை அய்யனார்

15 கூடமுடைய அய்யனார்

16 சிறை மீட்டிய அய்யனார்

17 எட்டிமுத்து அய்யனார்

18 செகுட்ட அய்யனார்

19 வெட்டுடைய அய்யனார்

20 மருது அய்யனார்

21 வேம்பூலி அய்யனார்

22 நிறைகுளத்து அய்யனார்

23 ஆதிபுதிரங்கொண்ட அய்யனார்

24 சித்தகூர் அய்யனார்

25 பிரண்டி அய்யனார்

26 வீரமுத்து அய்யனார்

27 பாலடி அய்யனார்

28 தந்தலை வெட்டி அய்யனார்

29 கருமலை காத்த அய்யனார்

30 அல்லல் தீர்த்த அய்யனார்

31 ஹரி இந்திர அய்யனார்

32 காடைபிள்னள அய்யனார்

33 செல்லப் பிள்ளை அய்யனார்

34 வீர பயங்கரம் அய்யனார்

35 மாணிக்கக் கூத்த அய்யனார்

36 வணங்காமுடி அய்யனார்

37 குன்னிமலை அய்யனார்

38 தூத்துவான் அய்யனார்

39 மாநாடு அய்யனார்

40 தலையூனி அய்யனார்

41 பொன்வண்டு அய்யனார்

42 பலவேசம் அய்யனார்

43 மருதமலை அய்யனார்

44 அல்லியூத்து அய்யனார்

45 வன்னிய அய்யனார்

46 எரிச்சீஸ்வர அய்யனார்

47 சுனை அய்யனார்,

48 வில்லாயுதம் உடைய அய்யனார்

49 கோச்சடை அய்யனார்

50 மக்கமடை அய்யனார்

51 வீரப்ப அய்யனார்

52 மஞ்சனீஸ்வர அய்யனார்

53 வெங்கலமூர்த்தி அய்யனார்

54 குரும்புடைய அய்யனார்

55 நீதியுடைய அய்யனார்

56 ஈடாடி அய்யனார்

57 செவிட்டு அய்யனார்

58 தேன்மலையாண்டி அய்யனார்

59 கலியுகமெய் அய்யனார்

60 கரந்தமலை அய்யனார்

61 பனையூருடைய அய்யனார்

62 அதிராம்சேரி அய்யனார்

63 மலம்பட்டி அய்யனார்

64 ஜடாமுனி அய்யனார்

65 ராசவெலி அய்யனார்

66 பொய் சொல்லாத மெய் அய்யனார்

67 அலங்கம்பட்டி அய்யனார்

68 புரோவர்த்தி அய்யனார்

69 ஐந்துமுடை அய்யனார்

70 அதினமிளகிய அய்யனார்

71 ஒடக்குலம் அய்யனார்

72 பாலாறுகொண்ட அய்யனார்

73 குன்னக்குடி அய்யனார்

74 குலம் அய்யனார்

75 வலையங்குளம் அய்யனார்

76 கருகப்பிள்ளை அய்யனார்

77 வெள்ளிமலை அய்யனார்

78 கருக்காச்சி அய்யனார்

79 பெரியகுளம் அய்யனார்

80 வளையங்குளம் அய்யனார்

81 செல்லபட்டி அய்யனார்

82 கடவுகாத்த அய்யனார்

83 செங்கமடை அய்யனார்

84 நல்லூடைய அய்யனார்

85 வல்லகுடி அய்யனார்

86 இடமறை அய்யனார்

87 சுண்டைக்காட்டு அய்யனார்

88 கூத்தினிகாட்டு அய்யனார்

89 வெள்ளவேடு அய்யனார்

90 அம்மச்சி அய்யனார்

91 நாகலிங்க அய்யனார்

92 உத்தம அய்யனார்

93 வெள்ளை வீர அய்யனார்

94 பெரியசாமி அய்யனார்

95 மூர்த்தி அய்யனார்

96 வேலங்கி அய்யனார்

97 சுயம்புலிங்க அய்யனார்

98 பராக்கிரப்பாண்டிப்பேரி அய்யனார்

99 வெற்றிவேல் அய்யனார்

100 ஐந்தருவி அய்யனார்

101 அழகிய அய்யனார்

102 குளத்தூ அய்யனார்

103 செம்புலி அய்யனார்

104அகலிகைசாபம்தீர்த்த அய்யனார்

105 படியேறும் அய்யானர்

106 குறும்பண்ட அய்யனார்

107 பேயாண்டி அய்யனார்

108 ஆறுமுக அய்யனார்

109 திருக்கோட்டி அய்யனார்

110 ஆதீனமிளகிய அய்யனார்

111 ஆனைமேல் அய்யனார்

112 வெங்கலமுடி அய்யனார்

113 சாகத அய்யனார்

114 வட்டத்தாழி அய்யனார்

115 பொன் அய்யனார்

116 புலியாண்டி அய்யனார்

117 சாத்த அய்யனார்

118 நடுவுடைய அய்யனார்

119 வேலடிபண்ணை அய்யனார்

120 சின்ன அய்யனார்

121 தேத்தாம்பட்டி மலையாண்டி அய்யனார்

122 வெள்ளுடைய அய்யனார்

123 வீரமலைஅய்யனார்

124 சோலைமலை அய்யனார்

125 குருவீரப்ப அய்யனார்

126 மஞ்சமலை அய்யனார்

127 செருவலிங்க அய்யனார்

128 சுண்டக்காட்டு அய்யனார்

129 அழகியவரத அய்யனார்

130 களத்திருடைய அய்யனார்

131 கலியுகவரத அய்யனார்

132 தண்டீஸ்வர அய்யனார்

133 வெள்ளந்திருவரசு வரத அய்யனார்

134 கரும்பாயிரம் கொண்ட அய்யனார்

135 நலலமுத்துஅய்யனார்

136 குன்னம் அய்யனார்

137 இராஜவளவண்டஅய்யனார்

138 பரமநாதஅயயனார்

139 பழங்குளத்து அய்யனார்

140 கொடைமுகி அய்யனார்

141 கரைமேல்அழகர் அய்யனார்

142 சிறைகாத்த அய்யனார்

143 மழைகாத்த அய்யனார்

144 செல்வராய அய்யனார்

145 திருமேனி அய்யனார்

146 நல்லசேவு அய்யனார்

147 பூங்காவிடை அய்யனார்

148 முத்துபிரம்ம அய்யனார்

149 மெய்சொல்லி அய்யனார்

150 கலிதீர்த்த அய்யனார்

151 பெருவேம்பு அய்யனார்

152 தோளப்ப அய்யனார்

153 மோக்கமுடைய அய்யனார்

154 மெய்ஞானமூர்த்தி அய்யனார்

155 வளமுடைய அய்யனார்

156 கொத்தவல்லிஅய்யனார்

157 மஞ்சள்கூத்த அய்யனார்

158 கட்டியப்பஅய்யனார்

159 ஓலைகொண்ட அய்யனார்

160 நல்லகுருந்த அய்யனார்

161 பந்தமாணிக்க அய்யனார்

162 செல்லக்குட்டி அய்யனார்

163 காரியழகர் அய்யனார்

164 ஆலமுத்து அய்யனார்

165 சாம்பக மூர்த்தி அய்யனார்

166 வள்ளாள கண்ட அய்யனார்

167 குழந்தி அய்யனார்

168 கூரிச்சாத்த அய்யனார்

169 திருவீதிகொண்ட அய்யனார்

170 சிங்கமுடைய அய்யனார்

171 பொய்யாழி அய்யனார்

172 பிழைபொறுத்த அய்யனார்

173 வினைதீர்த்த அய்யனார்

174 வலதுடைய அய்யனார்

175 துல்லுக்குட்டி ஐயனார்

176 நீலமேக அய்யனார்

177 முடிபெருத்த அய்யனார்

178 மருதய அய்னார்

179 உருவடி அய்யனார்

180 பெருங்காரையடி மீண்ட அய்யனார்

181 பாதாள அய்யனார்

182 வழிகாத்த அய்யனார்

183 கருத்தக்காட்டு அய்யனார்

184 சுந்தரசோழ அய்யனார்

185 கீழ அய்யனார்

186 வடக்க அய்யனார்

187 திருவரசமுர்த்தி அய்யனார்

188 மைந்தனைக் காத்தாடையப்ப அய்யனார்

189 தாடையப்ப அய்யனார்

190 தொண்டமண்டலஅய்யனார்

191 இராம அய்யனார்

192 பெத்தபாட்டைஅய்யனார்

193 செல்லமுத்துஅய்யனார்

194 முதலியப்பஅய்யனார்

195 மருதப்பஅய்யனார்

196 பணங்காடி அய்யனார்

197 சேவூராயஅய்யனார்

198 கண்ணாயிரமூர்த்தி அய்யனார்

199 தொரட்டை அய்யனார்

200 சுப்பாணிகூத்த அய்யனார்

201 வழியடி அய்யனார்

201 காரியப்பஅய்யனார்

202 பொற்கண்டஅய்யனார்

203 துள்ளுவெட்டி அய்யனார்

204 கூரிச்சாத்த அய்யனார்

205 கிளிக்கூண்டு அய்யனார்

206 நல்லி அய்யனார்

207 ஈடாடி அய்யனார்

208 ஆதி அய்யனார்

209 பரமநாத அய்யனார்

210 ஸ்ரீ புலிக்கரை அய்யனார்

211 தடி கொண்ட அய்யனார்

212 குறுமலை பொய்யாலப்பன் அய்யனார்

213 அரியசுவாமி அய்யனார்

214 காரிய அய்யனார்

215 வெள்ளந்தாங்கி அய்யனார்

216 ஏரமுடி ஐயனார்

217 செங்கொழுந்து ஐயனார்

218 பொய்யாடமூர்த்தி ஐயனார்

அய்யானாரை சில இடங்களில் சாஸ்தாவாக வழிபடுகிறார்கள். சாஸ்தாவாக வழிபடும் ஐய்யனாரின் பெயர்கள்

219 ஆதிமணிகண்ட சாஸ்தா

220 பெருவேம்புடையார் சாஸ்தா

221 சமூகமடம் குளத்தய்யன் சாஸ்தா

222 அரிகரபுத்திர சாஸ்தா

223 குளகக்ரை சாஸ்தா

224 மடையுடையார் சாஸ்தா

225 கலைக்காவுடையார் சாஸ்தா

226 வேம்படி சாஸ்தா

227 எம்பெருமாள் சாஸ்தா

228 தர்ம சாஸ்தா

229 மருதவுடையார் சாஸ்தா

230 சௌந்தரிய சாஸ்தா

231 அய்யனார்பட்டி சாஸ்தா

232 மருங்கய்யன் சாஸ்தா

233 மேகமுடையார் சாஸ்தா

234 மருது உடையார் சாஸ்தா

235 சடையுடையார் சாஸ்தா

236 பூனுடையார் சாஸ்தா

237 வடமலை சாஸ்தா

238 பனையடியான் சாஸ்தா

239 எட்டுடையார் சாஸ்தா

240 ஹரிஹரபுத்திர சாஸ்தா

241 பட்டமுடையார் சாஸ்தா

242 தெற்கு உகந்த உடையார் சாஸ்தா

243 குளத்தூராயன் சாஸ்தா

244 கோயில் குளம் சாஸ்தா

245 மடையுடையார் சாஸ்தா

246 குளத்தூராய்யன் சாஸ்தா

247 தலைக்காவுடையாயார் சாஸ்தா

248 காரிசாஸ்தா கரவுடையார் சாஸ்தா

249 காரியமுடையார் சாஸ்தா

250 உலகுடையார் சாஸ்தா

251 அஞ்சனமெழுதிய கண்டன் சாஸ்தா

252 காரி அய்யன் சாஸ்தா

253 சடையுடைய கண்டன் சாஸ்தா

254 வெட்டுவெண்ணி கண்டன் சாஸ்தா

255 பிராஞ்சேரி கண்டன் சாஸ்தா

256 புன்னார்குளம் சாஸ்தா

257 ஊருக்குடைய கண்டன் சாஸ்தா

258 நயினார் உதய கண்டன் சாஸ்தா

259 புதுக்குளம் கண்டன் சாஸ்தா

260 பொன்னாயிரமுடைய கண்டன் சாஸ்தா

261 சடையுடைய கண்டன் சாஸ்தா

262 கான சாஸ்தா

263 குடமாடிசாஸ்தா

264 சுரைக்காவல் அய்யன் சாஸ்தா

265 அரி கோவிந்த சாஸ்தா

266 திருவரசு அய்யனார்

மூலவர்
உற்சவர்

ஆன்ம நந்தி

இமாச்சல் பிரதேஷ் மாநிலம் காங்ரா மாவட்டம் பைஜ்நாத்தில் உள்ள அருள்மிகு வைத்தியநாதர் ஆலயத்தில் உள்ள ஆன்ம நந்தியின் சிலையில் நந்தியம்பெருமானின் வாலைப் பிடித்து ஒருவர் தொங்கிக் கொண்டுள்ளார்.

மனிதன் மரணம் அடைந்த பின்னர் செய்யும் 11 நாள் கிரியை செய்த பலனானது சிவனருள் மூலம் ஆத்மாவை எம தர்மனிடமிருந்து மீட்டு ரிஷப உத்ஸ்ஜர்னம் மூலமாக பித்ரு தேவதையாக்கப்பட்டு மூதாதையார்கள் இருக்கும் பித்ரு லோகம் செல்கிறது. அப்போது ரிஷபத்தின் வாலை பிடித்து கொண்டு பல நரககங்கள் கடந்து ஆத்மா பித்ரு லோகம் சென்றடைகிறது. இது வேதத்தில் உள்ள அந்தியேஷ்டியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை எடுத்துக்காட்ட சிலையாக வடித்துள்ளார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 512

பல ஆலயங்களுக்கும் சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்தும் மோட்ச தீபம் ஏற்றியும் இப்பிறவியல் தர்ம சிந்தனையோடு வாழும் ஒரு குடும்பத்தில் ஒரே குழந்தையை கொடுத்து அது வாய் சரியாக சரளமாக பேச முடியாமல் அனுதினமும் அனைவரும் மனவேதனையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வழி காட்டுங்கள்:

இறைவனை இறைவனின் கருணையை கொண்டு இதுபோல் பிரச்சனைகளுக்கு தீர்வு என்று எமை நாடுகின்ற மாந்தர்களுக்கு யாம் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் இதுபோல் ஊழ்வினை வந்து உறுத்தூட்டும் என்பது போல பாவ வினைகளை அத்தனை எளிதாக ஒரு மனிதனால் நீக்கி கொள்ள முடியாது. அதனால்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். ஒரு பாவத்தை செய்வது எளிது. நீக்கிக் கொள்வது கடினம் இருந்தாலும் மனதை தளர விடாமல் தொடர்ந்து இறை வழிபாட்டில் இருந்தால் நல்ல பலன் ஏற்படும் என்பது உறுதி. ஒருவேளை நிறைய பரிகாரங்களை செய்து விட்டோம். நிறைய தர்மங்களை செய்து விட்டோம். எந்த பிரச்சனையும் தீரவில்லை என்றால் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் பரிகாரங்களை செய்த மனிதனுக்கு வேண்டுமானால் அதிகமாக செய்தது போல் தோன்றும். விதிக்கோ எமக்கோ தோன்றவில்லை என்பதுதான் உண்மை.

இதை வேறு விதமாக நாங்கள் அடிக்கடி கூறுவோம். ஒரு வங்கியிலே ஒருவன் பல லகரம் ருணம் (கடன்) பெறுகிறான். மாதாமாதம் ஒரு தொகையை அடைத்துக் கொண்டே வருகிறான். சில ஆண்டுகள் ஆகிறது. உழைத்த ஊதியத்தில் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டே வருகிறோம் இன்னுமா கடன் தீரவில்லை? என்று வங்கியின் சென்று பார்த்தால் அப்பனே நீ வாங்கியது இந்த அளவு. இதற்கு வாசி (வட்டி) விகிதம் இந்த அளவு. நீ இதுவரை செலுத்தியது இந்த அளவு. இன்னும் செலுத்த வேண்டியது இந்த அளவு என்று கூறுவார்கள். ஆனால் அடைத்த அவனுக்கு தான் வழியும் வேதனையும் தெரியும். நான் எந்த சுகத்தையும் காணாமல் ஊதியத்தையெல்லாம் கொண்டு கடனை அடைத்து வருகிறேன். இன்னுமா ருணம் (கடன்) தீரவில்லை என்று அவன் வேதனைப்படுவான். எனவே எமை நாடுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கூறுகிறோம். எத்தனையோ பரிகாரங்களை செய்து விட்டோம். இவையெல்லாம் வீண் வேலை. ஏமாற்று வேலை. பரிகாரம் செய்து எந்த பலனும் இல்லை என்று சோர்ந்து போகின்ற உள்ளங்கள் சோர்ந்து போகாமல் தொடர்ந்து இறை வழியில் வந்தால் வெற்றி கட்டாயம் கிட்டும். தெய்வம் தோன்றாததோ தெய்வம் அருளாததோ தெய்வத்தின் குற்றமல்ல. மனிதரிடம் தான் குற்றம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட பிரச்சினைகள் வேண்டாம் என்றாலும் கூட மனித வேதனை அதனை தாண்டி கேட்க வைக்கிறது. இருந்தாலும் அண்மையிலே இதழ் ஓதும் மூடனை அவனறியாமல் ஒரு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றோம். அந்த ஆலயம் பெருமாள் ஆலயம். பேசுகின்ற பெருமாள் என்று காஞ்சி மாநகரத்தை ஒட்டி இருக்கக் கூடிய ஒரு சிறிய ஆலயம். இதுபோன்று வார்த்தைகளில் தடுமாற்றம் பெற்றவர்கள் வாக்கு வராத குழந்தைகள் அந்த ஆலயத்திற்கு சென்று முடிந்த பொழுதெல்லாம் வழிபாடு செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் உண்டு. திருசீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் சென்று முறையாக அமைதியாக பிரார்த்தனை செய்து கொண்டு வந்தால் பலன் உண்டு. ஏற்கனவே இவ்வாறு குறைகள் உள்ள குழந்தைகளை கொண்ட அமைப்புக்கு முடிந்த உதவிகளை செய்தாலே நல்ல பலன் உண்டு. இந்த குற்றம் குறை எதனால் வருகிறது? என்றெல்லாம் பார்க்கும்பொழுது ஒரு மனிதன் ஒரு பிறவியிலே எந்த துன்பத்தை தீர்க்க முடியாமல் துன்பத்தில் ஆழ்கிறானோ அந்த துன்பத்தை அவன் பிறருக்கு செய்திருக்கிறான் என்பது பொருள். எனவே இந்த ஜென்மத்தில் கூடுமானவரை இது போன்ற பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்து கொண்டு மனதை தளரவிடாமல் இறை பிரார்த்தனை செய்து கொண்டு வந்தால் கட்டாயம் இறைவன் அருளால் நன்மைகள் நடக்கும். இறைவனை வேண்டி எமக்கு இதுவரை எந்த பலனும் இல்லை என்று எண்ணக் கூடியவர்கள் இரண்டு முடிவுகள் எடுக்கலாம். ஒன்று இறை மறுப்பு நிலைக்கு சென்று விடலாம் அல்லது மீண்டும் மனம் தளராமல் இறை வழியில் செல்லலாம். மரணம் தளராமல் பிரார்த்தனை செய்தால் நன்மை உண்டு நன்மை உண்டு நன்மை உண்டு.

பஞ்சநந்திகள்

சிவபெருமான் வசிக்கும் கயிலாய மலையை காவல் காப்பவராக இருப்பவர். நந்தியம்பெருமான். ஆலயங்களில் சிவபெருமானின் முன்பாக வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர் இவர். நந்தியில் 5 வகைகள் இருக்கின்றன. இவர்களுக்கு பஞ்ச நந்திகள் என்று பெயர்.

போகநந்தி:

ஒரு சமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன் நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். இவர் போகநந்தி ஆவார். போகநந்தி அல்லது அபூர்வநந்தி என்று அழைக்கப்படும் இந்த நந்தியானது கோவிலுக்கு வெளியே அமைந்திருக்கும்.

பிரம்மநந்தி:

பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும் முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். இவருக்கு பிரம்மநந்தி என்று பெயர். இந்த நந்திக்கு வேத நந்தி வேத வெள்விடை பிரம்ம நந்தி என்று பல பெயர்கள் உள்ளது. இந்த நந்தி சுதைச் சிற்பமாக பிரகார மண்டபத்தில் காணப்படும்.

ஆன்மநந்தி:

பிரதோஷ கால பூஜையை ஏற்கும் நந்திக்கு ஆன்ம நந்தி என்று பெயர். இந்த நந்தி கொடிமரம் அருகே இருக்கும். எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார். உயிர்களுக்குள் இருக்கும் ஆன்மாக்களின் வடிவாக ஆன்மநந்தி உள்ளது.

மால்விடை:

மால் என்றால் மகாவிஷ்ணு விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும் போது மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இந்த நந்தியானது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.

தருமநந்தி:

இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழிகாலத்தின் முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைபெற்று இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கும். இவ்வாறு தன்னைத் தாங்கும் இடபத்தை பெருமான் ஆரத்தழுவிக்கொண்டார். இவ்வகையில் தரும நந்தியானது இறைவனைப் பிரியாது அவருடனேயே இருப்பார். இதை உணர்த்தும் வகையில் இந்த நந்தி இறைவனுக்கு அருகில் மகாமண்டபத்திலேயே எழுந்தருளியிருப்பார். பெரிய ஆலயங்களில் இத்தகைய ஐந்து நந்திகள் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலை காஞ்சிபுரம் முதலான தலங்களில் பஞ்ச நந்திகள் சிறப்புடன் போற்றப்படுகின்றன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 511

ஆலயங்களுக்குத்தான் பசுக்களை தானம் செய்ய வேண்டுமா? அல்லது வேறு அமைப்புகளுக்கு தானம் செய்யலாமா?

இறைவனின் கருணையால் கோ ஆ எனப்படும் பசு தானங்களை யாருக்கு வேண்டுமானாலும் மனம் உவந்து செய்யலாம். எந்த அமைப்புக்கும் தரலாம். எந்த ஆலயத்திற்கும் தரலாம். கூடுமானவரை நல்ல முறையில் பாரமரிக்க கூடிய அமைப்பிற்கு தருவது சிறப்பு. ஆனால் ஒவ்வொன்றையும் ஆய்ந்து ஆய்ந்து பார்த்தால் இந்தக் காலத்தில் தர்மம் செய்வதே அரிதாகிவிடும். எனவே எந்த நிலையிலும் யாருக்கும் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் பல ஆலயங்களில் பசுக்களை பராமரிக்க முடியாமல் அதனை வேறு எங்காவது சென்று விற்று விடுகிறார்கள். பசுக்களை தானம் செய்வது ஒரு நிலை. ஏற்கனவே பசுக்கள் இருக்கக் கூடிய ஆலயத்திற்கு முடிந்த உதவிகளை செய்வதும் பசு தானத்திற்கு சமம்தான். இயன்ற அன்பர்கள் ஒன்றுகூடி தக்கதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு பசுக்களை பராமரிப்பதும் குறிப்பாக கொலை களத்திற்கு அனுப்பப்படும் பசுக்களையெல்லாம் நிறுத்தி அவைகளை பராமரிப்பதும் மிகப்பெரிய புண்ணியமாகும். பசுக்களை காப்பாற்று என்று நாங்கள் கூறினால் ஆடுகளை பாம்புகளை காப்பாற்ற வேண்டாம் என்று பொருளல்ல. பசுக்கள் என்பது ஒரு குறியீடு. எல்லா உயிர்களையும் அன்போடு பராமரிக்க வேண்டும் என்பது அதன் பொருளாகும். எனவே எந்த நிலையிலும் எந்த அமைப்பிற்கும் எந்த ஆலயத்திற்கும் எப்பொழுது வேண்டுமானாலும் பசு தானம் செய்யலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 510

1008 சிவாலயம் சுற்றி வர வேண்டும் என்பதற்கு சிறப்பான காரணம் உள்ளதா?

லட்சத்து எட்டு என்று சொன்னால் மனிதன் எழுந்து போய்விடுவான். 108 என்று சொன்னால் ஒரு மாதத்திற்குள் சுற்றி வந்துவிட்டு சுற்றிவிட்டேன் என்பான். சில காலம் இங்கு (அகத்தியர் குடில்) வரவேண்டாம் என்பதற்காக தான் அவ்வாறு கூறுகிறோம். அனைவரும் இறைவனை எண்ணி ஐயர்வு காண நல்லாசிகள்.