தமிழகத்தின் மானம்பாடி நாகநாதசாமி கோயிலில் இந்த முருகரின் சிலை ஒருகாலத்தில் இருந்தது. நேர்த்தியான நுணுக்கமான அலங்கார வேலைபாடுகளுடன் சோழர் காலத்தில் செதுக்கப்பட்ட சிலையாகும். இக்கோயிலானது கிபி 11ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராஜேந்திரசோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது. விரைவில் இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைக்க உள்ளது.
















