சங்கு சக்கரத்துடன் முருகர்

ஒருமுறை அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே அவர்களை அழிக்க சிவபெருமான் முருகபெருமானை அழைத்து அசுரர்களை வதம் செய்ய உத்தரவிட்டார். முருகர் அசுரர்களை வதம் செய்ய கிளம்பும் போது சிவபெருமானும் தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தார்கள். அப்போது திருமால் தனது சங்கு சக்கரத்தை கொடுத்து ஆசி புரிந்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகபெருமான் அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் முருகன் கைகளில் கேடயம் வில் அம்பு சாட்டை கத்தி சூலாயுதம் வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர் கல்யாண சுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அவர் அருகில் வள்ளி தெய்வானை உள்ளனர். மயில் இடது புறமாக திரும்பி நிற்கிறது. இடம்: அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோவில். அழகாபுத்தூர் தஞ்சாவூர் மாவட்டம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.