சிவபெருமான் குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகருக்கு குருவாய் உபதேசம் செய்த காட்சி. இடம் மங்களநாதர் கோவில் உத்திரகோசமங்கை.

சிவபெருமான் குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகருக்கு குருவாய் உபதேசம் செய்த காட்சி. இடம் மங்களநாதர் கோவில் உத்திரகோசமங்கை.
வில்வ மரத்தடியில் இருக்கும் சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் பூஜை செய்யும் உதாங்கமுனிவர். இடம்: பஞ்சவர்ணேசுவரர் கோவில். உறையூர் திருச்சி.
அதிகார நந்திதேவர் மனித முகத்துடன் தனது துணைவியுடன் சிதம்பரம் வடக்கு கோபுரத்தில் அருளுகிறார்.
கர்நாடக மாநிலம் ஹலேபிடுவில் உள்ள ஹோய்சாலேஸ்வரர் கோவில். 12 ஆம் நூற்றாண்டு
சிவபெருமானின் வாகனமான நந்தியின் கழுத்தில் கயிறு ஆரம் மணிமாலை தொங்கல் அனைத்தும் கற் சிற்பத்தில் உள்ளது. இடம் கிக்கேரி. கர்நாடக மாநிலம். 12ம் நூற்றாண்டு.
அயர்லாந்தின் கவுண்டி விக்லோவில் உள்ள ரவுண்ட்வுட் அருகே அமைந்துள்ள விக்டர்ஸ் வே தனியாருக்குச் சொந்தமான தியானத் தோட்டம். 22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்காவில் கருப்பு கிரானைட் கல்லினால் செதுக்கப்ட்ட விநாயகர் சிவன் மற்றும் பிற இந்து தெய்வங்களின் மூர்த்திகள் உள்ளன.
இந்திரன் ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு அமைதியான தியானத் தோரணையில் அமர்ந்திருக்கிறார். தேவேந்திரன் என்றும் அழைக்கப்படும் இந்திரன் இந்து மதத்தில் தேவ லோகத்தின் தலைவனாகவும் பௌத்தத்தில் ஒரு பாதுகாவலராகவும் சமண மதத்தில் உயர்ந்த சொர்க்கத்தின் ராஜாவாகவும் இருக்கிறார். இவர் ஜீயஸ் மற்றும் வியாழன் போன்ற மேற்கத்திய கடவுள்களுடன் ஒத்த சக்திகளையும் புராணங்களையும் பகிர்ந்து கொள்கிறார். புத்த புராணங்களில் ஒரு முக்கிய நபராக இருக்கிறார் இந்திரன். புத்தரின் பிறப்புடன் தொடர்புடையவராக இருக்கிறார். அதுமட்டுமின்றி நேபாளத்தில் ஒரு சுதந்திர தெய்வமாக வணங்கப்படுகிறார். நேபாளத்தைச் சேர்ந்த இந்த 16 ஆம் நூற்றாண்டு சிலை தற்போது சிக்காகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் ஒரு கருவியில் வேலை செய்வது போலவும் இன்னொருவர் கைப்பேசியில் பேசுவது போலவும் உள்ள இந்த சிற்பம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மொபைல் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை எல்லாம் அன்றைய சிற்பங்களில் மிகவும் துல்லியமாக உருவாக்கி உள்ளார்கள் நமது முன்னோர்கள். அவர்கள் எதிர்காலத்தை அறிந்தவர்களாகவும் கற்பனையில் அதி நவீனமானவர்களாகவும் கலாச்சாரத்தில் மிகவும் தெய்வீகமானவர்ளாகவும் இருந்துள்ளனர். குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா அருகே சத்ருஞ்சய மலையில் அமைந்துள்ள பாலிதானா ஜெயின் கோவிலில் இந்த சிற்பம் உள்ளது.
கம்போடியாவின் கெமர் பேரரசில் இரண்டாம் ஜெயவர்மன் ஈசனை வணங்கும் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய சிற்பம். இடம் அங்கோர்வாட் கோவில் கம்போடியா.