சிவ பார்வதி திருமணம்

விஷ்ணு பகவான் தனது சகோதரி பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் செய்து கொடுக்கும் காட்சி ஒற்றைக் கல் தூணில் சிற்பமாக உள்ளது. ஆட்கொண்டநாதர் ஆலயம் இரணியூர் சிவகங்கை மாவட்டம்.

ஜடாயு கழுகு

ஜடாயு இயற்கை பூங்கா அல்லது ஜடாயு பாறை என்றும் இந்த இடம் அழைக்கப்படுகிறது. இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலத்தில் உள்ள ஒரு பூங்கா மற்றும் சுற்றுலா மையமாகும். இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 350 மீ உயரத்தில் உள்ளது மற்றும் இது உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் கொண்ட தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது. இந்த சிற்பம் 200 அடி நீளம் 151 அடி அகலம் 21 அடி உயரம் கொண்டது. தரையில் 15000 சதுரஅடி பரப்பளவைக் கொண்டது. ராமாயணத்தில் வரும் கழுகு வடிவான கதாப்பாத்திரமான ஜடாயுவின் சிற்பம் ஆகும்.