இந்திரனின் வெண்கல சிலை

இந்திரன் ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு அமைதியான தியானத் தோரணையில் அமர்ந்திருக்கிறார். தேவேந்திரன் என்றும் அழைக்கப்படும் இந்திரன் இந்து மதத்தில் தேவ லோகத்தின் தலைவனாகவும் பௌத்தத்தில் ஒரு பாதுகாவலராகவும் சமண மதத்தில் உயர்ந்த சொர்க்கத்தின் ராஜாவாகவும் இருக்கிறார். இவர் ஜீயஸ் மற்றும் வியாழன் போன்ற மேற்கத்திய கடவுள்களுடன் ஒத்த சக்திகளையும் புராணங்களையும் பகிர்ந்து கொள்கிறார். புத்த புராணங்களில் ஒரு முக்கிய நபராக இருக்கிறார் இந்திரன். புத்தரின் பிறப்புடன் தொடர்புடையவராக இருக்கிறார். அதுமட்டுமின்றி நேபாளத்தில் ஒரு சுதந்திர தெய்வமாக வணங்கப்படுகிறார். நேபாளத்தைச் சேர்ந்த இந்த 16 ஆம் நூற்றாண்டு சிலை தற்போது சிக்காகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.