வள்ளலார்

வள்ளலார் அவர்கள் 1864-ம் ஆண்டு வேட்டவலம் கிராமத்திற்கு வருகை தந்தபோது ஜமீன் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது பிரபல ஓவியரான விழுப்புரத்தைச் சேர்ந்த செங்கல்வராசு என்பவர் வள்ளலார் அவர்களின் திருஉருவத்தை ஓவியமாக வரைந்தார்.

அந்த ஓவியத்தின் கீழேயே வரைந்தவரின் கையொப்பமும் ஆண்டு தேதியும் குறிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமே நேரடியாக வரையப்பட்ட படம். இந்த படத்தில் இருப்பதுதான் வள்ளலாரின் திருஉருவம்.

துர்கா பரமேஸ்வரி அம்மன்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டீல் என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நந்தினி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது.