ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 609

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒருவனின் கைரேகையை பார்த்தே அவனுடைய திசா புக்தியைக் கூறி விடலாம். ஒருவனின் கண்களைப் பார்த்தே ஜாதகத்தை அளந்து விடலாம். ஒருவனின் ரோமத்தை வைத்தே அவன் இன்ன லக்னத்தில் பிறந்திருக்கிறான் என்று கூறிவிடலாம். இதையெல்லாம் தாண்டி ஒருவனை சந்திக்கும்போது அப்பொழுது அவனை சுற்றி நடக்கின்ற நிமித்தங்களை வைத்தே அவன் எதற்காக வந்திருக்கிறான் என்று கூறி விடலாம். நுணுக்கங்களுக்கும் அடிப்படை மனப்பக்குவம். எனவே மனதிலே உள்ள லோகாயத்தை தூக்கி விட்டெறி. நீயும் சகலத்தையும் கற்று தேர்ந்து ஒரு பரிசுத்த உன்னத நிலைக்கு செல்லலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.