ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 72

கேள்வி: சக்தியும் சிவனும் வெவ்வேறா? அல்லது ஒன்றா?

தங்கமும் நகையும் வெவ்வேறா? (பதில் – இல்லை ஒன்றுதான்). அதைப்போல் தானப்பா.

கேள்வி: அவ்வாறிருக்க சக்திக்கும் சிவனுக்கும் ஏன் தனித்தனி வழிபாடுகள்?

முன்புதான் கூறினோமேயப்பா. மனிதனுக்கு அனைத்தும் விதவிதமாக இருக்க வேண்டும். உண்ணுகின்ற உணவாக இருந்தாலும் உடுத்துகின்ற உடையாக இருந்தாலும் செல்லுகின்ற மார்க்கமாக இருந்தாலும் ஒரே விதமாக இருந்தால் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். அவனிடம் இருக்கின்ற தன்முனைப்புதான் இத்தனை விதமாக இறைவனை பிரித்து வைத்திருக்க உதவியிருக்கிறது அல்லது அதுதான் சரி என்று அவனுக்கு பட்டிருக்கிறது. எதுவுமே இல்லை ஒரு விலங்கைப் பார்த்து இதுதான் இறைவன் என்றால் அதையும் மனிதன் ஏற்றுக் கொள்வான். அதன் பின்னாலும் சிலர் செல்வார்கள். எனவே நீ சக்திக்குள்ளேயே சிவத்தைக் காணலாம். சிவத்திற்குள்ளேயே சக்தியைக் காணலாம். அதையெல்லாம் உணர்ந்து தானே அந்த அர்த்தநாரி வடிவத்தையே அன்று இறைவன் எடுத்திருக்கிறார். யாருக்கு எந்த வடிவில் இறைவனை வணங்க பிடிக்கிறதோ அந்த வடிவில் வணங்கிவிட்டுப் போகட்டும் என்றுதான் இறைவனும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: பூனை வழிபட்ட புனுகீஸ்வரர் பற்றி

சர்ம பிணிகளை நீக்கிக் கொள்ள முடியாமல் கர்மவினையால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

கேள்வி: நண்டு வழிபட்ட ஈஸ்வரர் பற்றி:

இந்த நண்டு வடிவில் மட்டுமல்ல பல்வேறு மகான்களும் ஞானிகளும் இன்றளவும் வழிபடக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. பிரம்மஹத்தி தோஷங்களில் நீக்கக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று.

குறிப்பு: பூனை மற்றும் நண்டு வழிபட்ட கோவில்களை பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.