ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 167

கேள்வி: இறைவனின் கருவறையை புகைப்படம் எடுப்பது குற்றமா?

முழுக்க முழக்க தவறு என்று கூற முடியாது. புற செயல்கள் இறையை எதுவும் செய்ய முடியாது. ஆனால் சில வகையான கட்டுப்பாடுகள் இருப்பதால்தான் சில ஒழுங்குகள் ஆலயத்தில் பின்பற்றப்படுகிறது. பல்வேறு ஆலய நிர்வாகங்களே இவ்வாறு நிழற்படத்தை எடுத்து வியாபாரம் செய்கிறது. என்றாலும் நீதி மாறும் போதுதான் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அந்தந்த சூழலைப் பொறுத்து இதனை பின்பற்றிக் கொள்ளலாம். சித்தர்களைப் பொறுத்தவரை மனிதனின் கேவலமான எண்ணங்கள் குறுக்கு புத்தி சுயநலம் இவைதான் தோஷத்தையும் பாவத்தையும் உண்டாக்கக் கூடியவை. எனவே உள்நோக்கமும் தீய எண்ணங்களும் இல்லாத அனைத்து செயல்களும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.