ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 571

கேள்வி: சில சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சிறப்பானது என்று சொல்லப்படுவது பற்றி:

இறைவனை உள்ளன்போடு ஒரு மனிதன் இப்பொழுதெல்லாம் வணங்குகிறானோ எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வணங்குகிறானோ அப்படி வணங்குகின்ற அந்த குணம் கொண்ட மனிதன் மனித நேயத்தையும் மறக்காமல் இருக்கிறானோ மனித நேயத்தோடு தான் கடமைகளையும் சரிவர ஆற்றுகின்றானோ அப்படி வாழ்கின்ற மனிதனுக்கு எல்லா காலமும் பிரதோஷம்தான். எல்லா காலமும் சதுர்த்திதான். எல்லா காலமும் அவனைப் பொறுத்தவரை மார்கழி மாதம்தான். எல்லா காலமும் சிவராத்திரிதான். எல்லா காலமும் நவராத்திரிதான். எனவே இது போன்ற திதியின்படி நட்சத்திரத்தின்படி சில விசேஷங்கள் வகுக்கப்பட்டது. அன்றாவது ஒரு மனிதன் தன் புறக் கடமைகளை விட்டுவிட்டு முழுக்க முழுக்க இறை வழியில் செல்லட்டுமே என்பதற்காகத்தான். எனவே எல்லா தினங்களும் சிறப்பான தினங்களே. ஒரு மனிதனை நடந்து கொள்வதை பொறுத்து.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.