ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 574

கேள்வி: பூமாதேவி தான் இந்த பூமியை தாங்கிக் கொண்டு இருக்கிறாள் என்பது உண்மையா? பூமாதேவி யார்? அவர் எந்த லோகத்தில் இருக்கிறார்?

பூமியை மட்டுமல்ல அண்ட சராசரங்களையும் தாங்கிக் கொண்டிருப்பது இறைவன். இறைவன் தர்மத்தின் வடிவம். எனவே நீ எதை கேட்டாலும் அது இறைவனின் மறுபடிவமாகத்தான் இருக்கும். இதை வேறு வகையாக கூறப்போனால் ஒரு மனிதன் இல்லத்தில் இருக்கும் பொழுது குடும்பத் தலைவன். மகனுக்கு தந்தை. மனைவிக்கு கணவன். அலுவலகம் சென்றால் அவன் அதிகாரி. இப்படி இடத்திற்கு தகுந்தாற் போல் ஒரு மனிதன் தன் நாமத்திலே சில மாற்றங்களை பெறுகிறான் செயலுக்கு ஏற்ப. அப்படி இறைவன் பூமியை தாங்குவதாக நம்பும் பொழுது பூமா தேவியாக போற்றப்படுகிறார் அவ்வளவுதான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.