ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 673

கேள்வி: பாவங்கள் குறைந்து விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

பாவங்கள் குறைந்தாலும் அல்லது முற்றிலுமாக தீர்ந்தாலும் கூட பெருங்காயப் பேழை போல் அதன் நறுமணம் தாக்கிக் கொண்டே தான் இருக்கும். இருந்தாலும் பாவம் கூடுமானவரை குறைந்திருக்கின்றது மிக மிக சிறிய அளவு தான் இருக்கிறது என்றால் தன்முனைப்பும் அகங்காரமும் இல்லாமல் போய்விடும். நான் யார்? நான் எத்தன்மை வாய்ந்தவன்? எந்த அளவு கல்வி கற்றவன்? என் வலிமை என்ன? என்னுடைய செல்வம் என்ன? என் பதவி என்ன? என் செல்வாக்கு என்ன? என்னை ஏன் இவன் எதிர்க்கிறான்? என்பது போன்ற எண்ணங்கள் எல்லாம் மெல்ல மெல்ல விலகி விடும். மனம் அமைதியை விரும்பும். கூடுமானவரை தனிமை விரும்பும். புரிதல் இல்லாத மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போகட்டும். அவன் விதி அவன் அவ்வாறு நடந்து கொள்கிறான். அவனுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம் என்ற ரீதியில் தான் மனித இனம் இருக்கும். இவன் எதிரி. இவன் நண்பன் என்கிற நிலை எல்லாம் கடந்து போகுமப்பா. எனவே பாவங்கள் குறைய அதை அனுபவத்திலே மனம் உணரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.