ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 568

கேள்வி: சத்சங்கத்திற்கு ரிஷிகளின் சித்தர்களின் ஆசீர்வாதம் கிடைத்ததா?

இறைவன் கருணையால் சப்தரிஷிகளும் அங்கு தான் இருந்தார்கள். ஆனால் சத்சங்கத்திற்கு வந்திருந்தவர்களில் எத்தனை பேர் இதை உணரக் கூடிய நிலையில் இருந்தார்கள்? இதோ கலைக் காட்சிக்கு வருவது போலத்தான் வந்தார்கள். இதை நாங்கள் குற்றம் என்று கூறவில்லை. அவர்களையும் பண்படுத்தி மேலே ஏற்ற வேண்டும் என்பதே பொருள். வேறு எதுவும் வேண்டாமப்பா. இறையிடமும் என்னிடமும் வரும்பொழுது மட்டும் மனிதன் தன் சிந்தனா சக்தியை ஒதுக்கிவிட்டு வந்தால் நாங்கள் அவர்களை மேலே ஏற்றுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் ஏமாறும் இடத்திலே அறிவை பயன்படுத்தாத மனிதன் எம்மிடம் வரும்போது மட்டும்தான் ஏன்? எதற்கு? எப்படி? இதை எப்படி ஏற்பது? இதற்கும் நடைமுறைக்கு முரணாக இருக்கிறதே? இப்படி எல்லாம் நடந்தால் உடனடியாக நட்டம் வருகிறதே? என்றெல்லாம் மிகப்பெரிய வேதாந்தி போல் சிந்திக்கிறான். இல்லை இல்லை அவன் விதி அப்படி அவனை சிந்திக்க வைத்து படுபாதாளத்தில் தள்ளுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.