ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 612

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒரு மனிதன் எமக்கு பிரியமானவன் எமது வழியில் வருபவன் என்றால் எமது வார்த்தைகளை உள்நிறுத்தி செவி கேட்டு செயல் நடத்திக் காட்ட வேண்டும். ஒரு செல்வந்தன் இருக்கிறான் அவன் தனக்கு பிரியமான ஒரு உதவியாளனை அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு செல்லும் பொழுது அவனுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் அவன் உதவியாளனுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆயினும் அந்த உதவியாளன் தவறுகள் ஏதேனும் செய்தால் அவனை அழைத்துச் சென்ற செல்வந்தருக்கு தானே அந்த கேவலம் ஏளனமும். அதுபோலத்தான் மிகப்பெரிய மகான்களின் உன்னத கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கும் எமக்கு எமது வழியில் வருபவன் என்று கூறிக்கொண்டு எமது வாக்கின் தன்மையை பிரதிபலிக்காமல் இருந்தால் அது எமக்கு ஏற்புடையதாக இராது. எம்மையும் ஏளனப்படுத்துவதாகும். அப்படிப்பட்டவர்களுக்கு யாங்கள் பெயரளவுக்குத்தான் வாக்குகளை தருவோமே ஒழிய ஆத்மார்த்தமாக அல்ல. புத்தி சொல்லித் திருந்தவில்லை என்றால் அவன் விதிப்படி வாழட்டும் என்று விட்டுவிடுவோம்.

காலம் இடம் சூழல் சுற்றி உள்ள மனிதர்கள் வறுமை வளமை இல்லம் தொழில் இதில் எது சிக்கலாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு அறம் சத்தியம் இறை பிரார்த்தனையை மறவாதே. இவற்றை பின்தொடர்ந்து கொண்டே வா. யாம் உன் அருகில் இருந்து கொண்டே இருப்போம். ஆசிகள் சுபம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.