ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 563

கேள்வி: சில தேவாலயங்களில் இறந்தவர்களை புதைத்து வைக்கும் வழக்கம் இருக்கிறது. இதனைப்பற்றி:

பொதுவாக இதுபோன்ற விஷயங்களை நாங்கள் ஆதரிப்பதில்லை. போதிக்கவுமில்லை. இவையெல்லாம் தவறான வழிகாட்டுதலால் ஏற்பட்ட விஷயம். இவைகளை குறைத்துக் கொள்வது மனித சமுதாயத்திற்கும் பூமி வளத்திற்கும் நல்லது. நன்றாக கவனிக்க இறந்த விலங்குகளை புதைத்தால் பூமிக்கு நன்மை உண்டு. தாவரங்களுக்கு நன்மை உண்டு. மனிதனை அவ்வாறு செய்வதைவிட அக்னிக்கு இரையாக்குவதே நல்ல செயலாகும். இருந்தாலும் மிகப்பெரிய புனிதமான ஆத்மாக்கள் சிலரை வேண்டுமானால் இவ்வாறு செய்யலாம். இருந்த போதிலும் அக்னிகாரியம் என்பதே இந்த இடத்தில் பொருத்தமானதாகும். மற்ற விளக்கங்களை மீண்டும் தக்க காலத்தில் உரைப்போம் ஆசிகள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.