ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 293

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒன்று உருவாகிறது என்றாலே பிறகு அது இல்லாமல் போய்விடும் என்ற பொருளும் உண்டு. சைவ சித்தாந்தத்தை நோக்கினால் தத்கர்ய வாதம் என்ற ஒன்று இருக்கிறது. எனவே இறை என்றும் எப்போதும் இருக்கிறது. அதற்கு ஆதியும் அந்தமும் இல்லை. ஆத்மாவும் அப்படித்தான். இன்று நீ அன்று நான் எனவே இந்த தத்துவத்தினுள் ஒரு மனிதன் கால் பதித்துவிட்டால் அவனுக்கு காலம் இல்லை இடம் இல்லை உறவில்லை கர்மா இல்லை வேதனை இல்லை சோதனை இல்லை எதுவும் இல்லை. இப்பொழுது பார்க்கின்ற அனைத்தும் ஒரு மாயத் தோற்றம் என்பது அப்பொழுது புரியும். கேள்விகளே இல்லாத ஒரு நிலை ஏற்படும்.

மனிதர்களிடம் உள்ள குறைகளில் பெரும் குறை என்ன என்றால் பேசிக் கொண்டே இருப்பதுதான். மனிதர்கள் மௌனத்தைக் கடைபிடித்தால் பல கேள்விகளுக்கு பதில் உள்ளேயே தோன்றும். எனவே கூடுமானவரை பேசவேண்டிய நாழிகை தவிர வேறு நாழிகைகளில் மௌனமாக செயல்படுவது பேசினால் அர்த்தம் உள்ளதாகவும் பிறருக்கு ஆனந்தம் தரக்கூடியதாகவும் நல்ல ஆக்கப்பூர்வமான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். தேவையில்லாத அரசியல் நிகழ்வுகள் அசுர மனிதர்களைப் பற்றிப் பேசுவது இவையெல்லாம் மனித சக்தியை விரயமாக்கும். எனவே கூடுமானவரை மௌனமாக இருந்தால் சிக்கல்கள் யாருக்கும் எழாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.