ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 479

கேள்வி: மனோபலத்தை அதிகரிக்க எந்த ஆலயங்களில் வழிபாடு செய்வது?

பிரார்த்தனை ஆலய தரிசனம் தர்மம் ஒருபுறம். அடுத்ததாக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் பொழுது எனக்கு மனோபலம் அதிகரிக்க வேண்டும். என் மனோபலம் உறுதியாக இருக்கிறதா? என்று நான் பார்க்க வேண்டும். வெறும் சுகமான சந்தோஷமான அனுபவங்களும் நடந்து கொண்டே இருந்தால் எனக்கு மனோபலம் இருக்கிறதா? இல்லையா? என்றே தெரியாது. எனவே எனக்கு துக்கமான சோதனையான வேதனையான அனுபவங்களும் இன்னும் கூறப்போனால் ஏளனங்களும் அவமானங்களும் அதிகமாக வேண்டும் இறைவா அவை அதிகமாக வந்தாலும் நான் கோபப்படாமல் அவர்கள் மீது சினம் கொள்ளாமல் ஆத்திரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்காமல் பொறுமையோடும் புன்முறுவலோடும் அதனை ஏற்கக் கூடிய பக்குவத்தைக் கொடு என்று பிரார்த்தனை செய்து கொண்டே வந்தால் ஒரு மனிதன் நேர்மையான மனிதனாக இருந்தால் இறைவழியில் சத்திய வழியில் வருபவனாக இருந்தால் தர்மத்தை பின்பற்றக் கூடிய மனிதனாக இருந்தால் கட்டாயம் மேற்கூறிய துன்பங்கள் ஏளனங்கள் அவமானங்கள் அவனுக்கு மனோபலத்தை அதிகரிக்கும். இதைத் தாண்டி அவன் பஞ்சாக்ஷரத்தையோ அட்டாக்ஷரத்தையோ வேறு இஷ்ட தெய்வ நாமத்தையோ வடகிழக்கு திசைநோக்கி பத்மாசனத்தில் அமர்ந்து அதிகாலையில் அதிகமதிகம் உருவேற்றினால் கட்டாயம் மனோபலம் அதிகரிக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.