ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 54

கேள்வி: உயிர்பலி குறித்து

மிக மிக கொடிய பாவம். இந்த பாவத்திற்கு பிராய்ச்சித்தம் என்பதே கிடையாது. அறியாமை மக்கள் செய்யலாம். அறிந்த பிறகு இதனை விட்டுவிட வேண்டும். ஒரு மனிதன் தன்னை விட தாழ்ந்த உயிரை இவ்வாறு துன்பப்படுத்துவதை இறைவன் ஒரு பொழுதும் பொறுத்துக் கொள்வதில்லை. ஒருவேளை செல்வத்திலும் பதவியிலும் சக்தி வாய்ந்த மனிதனைப் பார்த்து இன்னொரு மனிதன் நீ ஒரு 100 குழந்தைகளை பலியிட்டால் பதவி நிலைக்கும் என்று கூறுவதாகக் கொள்வோம். தன் செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி ஊரிலே உள்ள 100 குழந்தைகளை கடத்தி சென்று அவன் பலி கொடுத்தால் அதை இந்த சமுதாயம் ஒத்துக் கொள்ளுமா? ஒத்துக் கொள்ளாது அல்லவா? தங்கள் குழந்தைகளை இழக்க எந்த பெற்றொரும் விரும்பாதது போல இறைவனும் தான் படைத்த உயிர்களை தான் படைத்த இன்னொரு உயிர் துன்புறுத்துவதை ஒரு பொழுதும் தாங்கிக் கொள்ள மாட்டார். இறைவனின் கடுமையான சாபத்திற்கும் கோபத்திற்கும் ஆளாக வேண்டியிருக்கும். அறியாமையால் கால காலம் இந்த தவறை மனிதர்கள் செய்கிறார்கள்.

கேள்வி: ஐயா நீங்கள் உயரம் குறைவு என எல்லோரும் கூறுகிறார்களே?

நான் ஆறடி உயரமப்பா அது அந்த நடிகனால் வந்த வினையப்பா

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.