ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 681

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

உலகியல் ரீதியான வெற்றியை ஒரு மனிதனுக்கு இல்லையென்றால் அத்தனை எளிதாக விட்டுவிடுகிறானா? போராடி போராடி அது வேண்டும் என்று அதன் பின்னால் செல்வது போல நல்ல காரியங்களை நல்ல அறச் செயல்களை நல்ல தர்மங்களை தொடர்ந்து செய்ய விதியே ஒரு மனிதனுக்கு தவறாக எழுதப்பட்டிருந்தாலும் அதாவது அவன் இந்தப் பிறவியில் தவறே செய்து வாழ வேண்டும் என்று இருந்தாலும் கூட அந்த விதி மெல்ல மெல்ல மாறத் துவங்கும்.

இதுபோல் ஒருவன் பருக வேண்டிய மோரிலே சிறிது உப்பை சேர்க்கலாம். தவறுதலாக அதிக அளவு உப்பை சேர்த்து விட்டால் இல்லை இது குடிக்க முடியவில்லை. உப்பின் சுவைதான் தூக்கலாக இருக்கிறது. என்ன செய்வது? என்று தெரியவில்லை. எனவே இதில் உள்ள உப்பை மட்டும் பிரித்துத்தா என்றால் அது கடினம். அதற்கு பதிலாக என்ன செய்யலாம். இன்னும் சிறிதளவு மோரை ஊற்றி உப்பின் அளவை அதன் மூலம் குறைக்கலாம். எனவே ஏற்கனவே செய்த பாவங்களின் அளவை ஒரு மனிதன் பிறப்பிலிருந்து பிரிப்பது கடினம். ஆனால் மேலும் மேலும் புண்ணியத்தை சேர்க்க பாவங்களின் அளவு குறையும் என்பதை புரிந்து கொண்டிட வேண்டும்.

இதற்குத்தான் ஜீவா அருள் ஓலையிலே புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் என்று ஒவ்வொரு மனிதனையும் அறச் செயல் செய்ய நாங்கள் தூண்டிக் கொண்டே இருக்கிறோம். ஏனென்றால் அந்த புண்ணியத்தின் அளவு அதிகமாக அதிகமாக கரிக்கின்ற உப்பை போன்ற பாவங்களின் அளவு சரிவிகிதமாகி விடும் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.