ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 638

கேள்வி: மனம் ஒடுங்க என்ன செய்ய வேண்டும்?

உலகியல் செயல்கள் அனைத்தும் கர்ம வினைகளால் (மனிதர்கள்) ஏற்படுத்திக் கொள்பவை. ஏற்பட்டுக் கொண்டிருப்பவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்தில் பணி புரிகின்ற மனிதன் அந்த நிறுவனத்தை தன் இல்லமாக ஒரு பொழுதும் கருகுவதில்லை. வந்து போகின்ற இடமாகத்தான் கருதுகிறான். ஆனால் தன் இல்லம் தன் வாகனம் தன் குடும்பம் என்றால் சற்றே ஒட்டுதல் வந்து விடுகிறது. எனவே இந்த உலகத்தையும் ஒரு நிறுவனமாக பார்த்து இங்கே சில காலம் பணிபுரிய அந்த ஆத்மா இந்த உடம்பு என்ற வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. வந்த பணி முடிந்தவுடன் இல்லம் திரும்புவது போல அது செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடும் என்ற நினைவோடு வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டு விட்டால் மனம் ஒடுங்க தொடங்கிவிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.