ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 451

கேள்வி: விநாயகருக்கு ஜாதிபத்திரி வைத்து வழிபட்டால் என்ன பலன்?

விநாயகருக்கும் ஜாதியா? இறைவனுக்கு உள்ளன்போடு எதை வைத்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார் என்பதே உண்மை. இதைதான் அதைதான் வைக்கவேண்டும் என்றெல்லாம் இறைவன் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்வதில்லை. மனிதர்கள் எதை வைக்கிறார்கள்? என்பதைவிட எப்படி வைக்கிறார்கள்? என்பதைதான் இறைவன் பார்க்கிறார். எனவே எதை வைத்தாலும் உள்ளன்போடு வைப்பதே சிறப்பு. அருகம்புல் மருத்துவ குணம் கொண்டது. அருகம்புல்லை அருந்து உடலுக்கு நல்லது என்றால் கேட்கக் கூடிய மனோபாவம் இன்று ஓரளவு இருந்தாலும் எக்காலத்திலும் அப்படி எதுவும் இல்லை. அருகம்புல்லை உண்டால் நல்லது என்று கூறுவதைவிட அதை இறைவனின் பிரசாதமாக கொடுப்பது அக்காலத்தில் சிறப்பான முறையாக கையாளப்பட்டு வந்தது. நன்றாக கவனிக்க வேண்டும். இப்பொழுது அருகம்புல்லை மாலையாக இறைவனுக்கு சாற்றி கையில் தந்துவிடுகிறார்கள். அதுவும் பிரசாதம்தான். ஆனால் ஒரு காலத்திலே அருகம்புல்லை மாலையாக சாற்றுவதோடு தூய்மையான அருகம்புல்லை பணிவன்போடு மிகவும் பணிந்து போற்றி இறைவனின் பூஜைக்காகவும் எங்களின் நலத்திற்காகவும் உன்னை பறிக்கிறேன். மன்னித்துக்கொள் என்றெல்லாம் வேண்டி மூலிகை சாபத்தை நீக்கி அந்த மூலிகையை பறித்து வந்து அருகம்புல்லை கஷாயமாக்கி அதையும் விநாயகர் முன் வைத்து படைத்து அதை பிரசாதமாக தரும் வழக்கம் இருந்தது. இப்பொழுது அது இல்லை என்பதுதான் உண்மை.

துளசியை இறைவனுக்கு நிவேதனம் செய்வதும் மருத்துவ குணத்தின் காரணமாகத்தான். எனவே எப்படியாவது மனிதன் நலம் பெறவேண்டும். அவன் உடலும் உள்ளமும் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விதவிதமான வழிபாடுகளும் பிரசாதம் என்ற பெயரில் விதவிதமான பொருள்களும் வைக்கப்பட்டன. அதை அன்போடு வைத்தால் கட்டாயம் இறைவன் ஏற்றுக்கொண்டு சாதம் பிரசாதமாக மாறும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.