ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 501

கேள்வி: வலம்புரி சங்கைப் பற்றி:

வலம்புரி சங்கை முக்கண்ணனை (மூன்று கண்களைக் கொண்ட சிவ பெருமானை) வைத்து யார் வழிபாடு செய்கிறார்களாே அவர்களுக்கே தர வேண்டும். முக்கண்ணனின் (சிவ பெருமானின்) வழிபாடு முறையாக செய்பவருக்கே வலம்புரி சங்கு சென்று சேர வேண்டும். சங்கை அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் முன் சங்கையே அபிஷேகம் செய்ய வேண்டும். அது போலவே மேல் உள்ள குறிப்புகளை அகற்றிவிட்டு (சுத்தம் செய்துவிட்டு) சுத்தமான நீரில் ஏக (ஒரு) தினம் (நாள்) வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் சுத்தமான ஆவின் (காேமாதாவின்) பாலிலே சூலத் (27 நாட்களைக் கொண்ட) திங்கள் (ஒரு தமிழ் மாதம்) குறையாது வைத்திருக்க வேண்டும். சூல (27) முறை பால் மாற்ற வேண்டும். கங்கை நீரிலே வைக்க மேலும் நலம். நீரிலே ஒவ்வாெரு முறையும் சுத்தம் செய்து பத்திரமாக வைக்க வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.