ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 390

கேள்வி: குமரகுருபரரை பற்றி

இறைவனின் அருளைக் கொண்டு இதுபோல் மழலை பேசும் என்று மழலையைப் பெற்ற பெற்றோருக்கு மழலை பேசுமா? என்கிற ஐயம் வந்த பொழுது மழலை பேசும் என்று சீரலைவாய் (திருச்செந்தூர்) முருகன் காட்டிய காட்சிதான் அந்த குமரகுருபரரின் காதையாகும். முருகப்பெருமானின் பரிபூரண கருணையை பெற்று அதுபோல் பேசும் ஆற்றல் மட்டுமல்லாமல் பாடும் ஆற்றலையும் பெற்று நல்ல முறையிலே தமிழையெல்லாம் கற்று அன்னை கலைவாணி மீது சகலகலாவல்லி மாலையை இயற்றி அதன் மூலம் பல மன்னர்களையெல்லாம் வென்று அங்குள்ள வடபுல (வடநாட்டு) புலவர்களையெல்லாம் அந்த வடமொழியிலேயே வாதிட்டு வென்றவன்தான் இந்த குமரகுருபரன்.

இது அண்மையில் நடந்த நிகழ்வுதான். இதுபோன்ற பல நிகழ்வுகள் இன்றும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் இறைவன் எனக்கு அருள்கிறார். அல்லது இறைவன் தரிசனம் எனக்கு கிடைத்திருக்கிறது அல்லது இறைவனின் கருணை எனக்கு கிடைத்திருக்கிறது என்பதை மனிதன் மற்ற மனிதரிடம் அதை பகிர்ந்து கொண்டு அவர்கள் அதை ஒத்துக் கொண்டால்தான் இந்த மனிதனுக்கு ஆறுதல் கிட்டுகிறது. அப்படியில்லாத வரையில் இவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே நல்ல சாத்வீக எண்ணத்தோடு இதுபோல் இறை வழியில் சென்றால் ஒவ்வொரு குழந்தையும் குமரகுருபரர் ஆகலாம்.

குமரகுருபரரின் வரலாற்றை மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.