ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 694

கேள்வி: துளசியின் பெருமைகளைப் பற்றி கூறுங்கள்?

துளசி கிருஷ்ணணின் அருள் பெற்ற நங்கைதான். அந்த நங்கையின் அருளால் உண்டானதுதான் துளசி. இந்த துளசி சீதள நோயை குணமாக்கக் கூடியது. கடுமையான நீர் கோர்த்துக் கொண்டு நுரையிரலிலே சொல்லில் அடங்காத அளவுக்கு நீர் இருக்கும் போது அதற்கு இந்த தூய்மையான துளசியை அதிலும் கருந்துளசியை எடுத்து தூய்மை செய்து தூய்மையான நன்றாக கவனிக்க வேண்டும் மாசில்லாத செப்பு பாத்திரத்திலே அவற்றில் தூய்மையான நீரை வைத்து அவற்றிலே சில துளசி தலைகளை இட்டு ஒரு ஓரவு முழுவதும் பாதுகாப்பாக வைத்துவிட்டு அதிகாலை வெறும் வயிற்றில் அருந்த கடுமையான சளி தொடர்பான பிணிகள் எல்லாம் நீங்கி விடும். அதுபோல் மட்டுமல்லால் துளசி மாலையை ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை தோறும் சாற்றிவர சனி பகவான் ஆதிக்கம் பெற்றோருக்கு அதன் மூலம் வரக்கூடிய அந்த துன்பங்களை தாங்கக்கூடிய வலிமையினை தருவார். இன்னும் எத்தனையோ கூறிக் கொண்டு செல்லலாம். இன்னவன் வைத்திருக்கிறானே அந்த முக்கோண வடிவம் (பிரமீடு) அவற்றின் அடியிலே இந்த துளசி அடங்கிய நீரை வைத்து ஓர் இரவு முழுவதும் வைத்துவிட்டு உண்டால் இன்னும் அதிக ஆற்றல் நோய் எதிர்ப்பு சக்தி ஒரு மனிதனுக்கு வரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.