ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 567

கேள்வி: திருமூலர் 3000 ஆண்டுகள் தியானம் இருந்து திருமந்திரம் பாடல் இயற்றினார் என்பது பற்றி:

இறைவனின் கருணையால் மனித ஆண்டு கணக்கு வேறு. தேவ ஆண்டு கணக்கு என்பது வேறு என்பது பலர் அறிந்ததுதான். இதுபோல் நிலையிலே முனிவர்கள் ரிஷிகள் சித்தர்கள் ஆண்டு என்பதும் வேறு வேறு நிலைதான். மூவாயிரம் ஆண்டுகள் என்பது மனித ரீதியாக பார்க்கக் கூடாது. அது தேவ ஆண்டுகளை விட மிக அதிக கணக்கு. எனவே சூட்சமமான நிலையில் அன்னவன் (திருமூலர்) இயற்றிய தவமாகும். மனித சக்தியால் அதை புரிந்து கொள்வது என்பது மிக கடினம். அது மட்டுமல்ல இது போன்ற ஞானநிலையை அடைந்த சித்த நிலையை அடைந்தவர்கள் கூறுகின்ற வாக்கியங்களையும் நேருக்கு நேர் பொருள் கொள்வது என்பது கடினம். பாவங்கள் குறைந்த ஆத்மா வாசித்தால் ஓதினால் அப்பொழுது வருகின்ற பொருளை மெய்ப்பொருளாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.