ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 466

கேள்வி: இறந்தபின் செய்யும் கண் தானம் உடல் உறுப்பு தானம் பற்றி கூறுங்கள் :

இறைவன் அருளால் யாங்கள் முன்பே இதுகுறித்து கூறியிருக்கிறோம். பலர் அறிந்ததுதான். எல்லாவகையான தானங்களையும் யாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். உடல் தானத்தையும் ஏற்றுக் கொள்கிறோம். கண் தானத்தையும் ஏற்றுக் கொள்கிறோம். ஒருமுறை கூறியிருக்கிறோம் ஒரு மனிதன் வாய்ப்பு இருக்கும் பட்சத்திலே இன்னொரு நல்ல மனிதனுக்கு விழி இருந்தால் அவனால் பலருக்கும் நன்மை எனும் பட்சத்தில் உயிருடன் இருக்கும் பொழுதே விழியைக் கூட தானமாக கொடுக்கலாம் தவறொன்றுமில்லை என்று கூறியிருக்கிறோம். இந்த இடத்திலே ததீசி முனிவரை நினைத்துக் கொள்ள வேண்டும். தன் உயிர் போனாலும் பலருக்கு நன்மை என்று தன் உடைமையையும் தன் முதுகு எலும்பையும் அவர் தந்திருக்கிறார். தான் இறந்த பிறகு உடல் தானம் கொடுக்கவே மனிதன் தயங்குகிறான். எம்மைப் பொறுத்தவரை உயிரோடு இருக்கும்போது கொடுத்தாலும் உயர்வுதான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.