ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 535

கேள்வி: சத்தி முற்றத்தில் அமைந்திருக்கும் த்வார விநாயகர் முருகன் பைரவர் மற்றும் சிவலிங்கம் ஆகியவற்றின் சிறப்புகள் பற்றி:

இறைவன் அருளால் முன்னார் கூறியது போல் திருமண தோஷ நிவர்த்தி ஸ்தலம் மட்டுமல்லாமல் ராகு திசை நடப்பவர்கள் ஜாதகத்தில் ராகு கெடு பலனை தருவதாக நம்ப கூடியவர்கள் திருமணமாகி பிரிந்திருப்பவர்கள் சென்று வணங்க வேண்டிய தலங்களுள் இன்னவன் கூறிய தெய்வ சன்னதியையும் ஒன்று அங்கே அன்றாடம் முடிந்த நெய் தீபம் ஏற்றி நறுமணமிக்க மலர் மாலைகளை சாற்றி வழிபாடு செய்து வந்தால் வழக்கு மன்றம் வரை சென்றவர்கள் எல்லாம் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பட்டீஸ்வரம் சென்று துர்கையை வணங்கக்கூடிய மனிதர்களுக்கு வினைப் பயன் காரணமாக இந்த தலம் இருப்பது தெரியாமல் போய்விடுகிறது. எனவே பட்டீஸ்வரம் சென்று வணங்க கூடியவர்கள் திருச்சத்தி முற்றமும் சென்று வணங்குவது சிறப்பு அப்பா.

இத்தத்தலத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.