ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 22

கேள்வி: ஐயனே நாங்கள் தினசரி செய்ய வேண்டிய கடமைகள் பூஜைகள் என்ன?

குறைந்தபட்சம் ஏதாவது ஒரு ஆலயம் சென்று மனமொன்றி வழிபடுவது நன்மையைத் தரும். அப்படியும் இல்லாதவர்கள் குறைந்தபட்சம் இரண்டு நாழிகையாவது (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) காலையிலாலோ மாலையிலோ இல்லத்தில் அமைதியாக நெய் தீபம் ஏற்றி உயர்வான முறையிலே வாசனாதி திரவியங்களையெல்லாம் இட்டு ஏதாவது இறை நாமாவளியை (சொல்லி) மனதிற்கு பிடித்த எந்த இறைவனின் வடிவத்தையாவது வணங்கி வருவது நன்மையைத் தரும். குறைந்த பட்சம் ஒரு மனிதருக்காவது அவனுக்கு வேண்டிய நியாயமான உதவிகளை செய்வது இறைவனின் அருளை விரைவில் பெற்றுத் தரும். அடுத்ததாக தன் கடமைகளை மறக்காமல் நேர்மையாக ஆற்றுவது என்ற உறுதியை எடுத்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். மனைவியாகப்பட்டவள் இல்லறக் கடமைகளை ஆற்றுவதும் கணவனாகப்பட்டவன் பணியில் உள்ள கடமைகளை ஆற்றுவதும் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டிய கடமைகள் ஆற்றுவதும் எதையும் ஒத்தி வைக்காமல் நேர்மையான முறையில் உடனுக்குடன் செய்கின்ற ஒரு பழக்கத்தை கடைபிடித்துக் கொண்டே இறை வழிபாடு தர்ம காரியங்கள் செய்வது கட்டாயம் இறைவனை நோக்கி செல்வதற்கு மிக எளிய வழியாகும்.

கேள்வி: கார்க்டோக நல்லூர் பற்றி:

தாமிரபரணி கரையில் உள்ள மண்ணையும் நீரையும் கலந்து பிசைந்து பிறகு தன் மூச்சுக் காற்றால் கார்க்கோடகன் என்னும் பாம்பு ஐயனை வடிவமைத்த இடம் இது. உடலிலே ஒவ்வாமை விஷத்தன்மை உடையவர்களுக்கு வழிபாடு செய்ய ஏற்ற இடம்.

(இக்கோவிலைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வரும் பக்கத்தில் படித்துக் கொள்ளலாம்) https://tsaravanan.com/karkodaka-nallur/

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.