ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 657

கேள்வி: தேங்காய் எண்ணையில் தீபம் ஏற்றுவதற்கு நேரம் உண்டா?

தீபத்தை ஏற்றுவதன் பொருள் இருள் மாயா சக்தி. இருள் அசுர சக்தி. ஒளியே தெய்வ சக்தி. எனவே ஒளியைத்தான் ஆதிகாலத்தில் தெய்வத்தின் வடிவமாக பார்த்து அதுபோலவே வழிபாடு செய்து வாந்தான். ஒளி அக்னியாக மின்னலைக் கண்டு அதிலும் தெய்வ அம்சமாக இப்படி தீபத்திலும் இறை சக்தியை கண்டு வணங்கி வந்தான். எனவே இன்றும் எத்தனையோ தற்காலத்தில் இதுபோல் எண்ணை இல்லா (மின்சார விளக்கு) விளக்குகள் மனிதன் பயன்படுத்தக் கூடிய நிலை இருந்தாலும் முந்தைய கால தீபம் ஏற்றுகின்ற முறையும் இருந்து வருகிறது. இவற்றில் கலப்பில்லா நெய் எல்லா வகையிலும் சிறந்தது. தீபத்தை ஏற்றுவதின் மூலம் ஒரு மனிதன் அந்த சுற்று வெளியை தூய்மை படுத்துகிறான். எனவே அந்த தீபத்தில் அவன் இடுகின்ற பொருளுக்கும் இதுபோல் அந்த சுற்று வெளிக்கும் பர வெளிக்கும் தொடர்பு இருக்கிறது. தூய்மையான நெய் தீபம் பொதுவாக அனைவருக்கும் ஏற்றது. எந்த நிலையிலும் அது ஏற்புடையது. அது இல்லாத நிலையிலே இலுப்பை எண்ணை கொண்டு ஏற்றலாம். எள் எண்ணையும் ஏற்றலாம். இதுபோல் தேங்காய் எண்ணையும் தாராளமாக ஏற்றலாம். இவற்றுக்கெல்லாம் காலமோ அல்லது இந்தந்த நட்சத்திரங்களில் தான் இந்தத்த தீபம் ஏற்ற வேண்டும் என்பதல்ல. ஆனால் தீபத்தை ஏற்றுகிறேன் என்று ஆலயத்தை அசுத்தப்படுத்தினால் அது கடுமையான தோசத்தை ஏற்றுகின்றவனுக்கு ஏற்படுத்தும். ஆலயத்தை தூய்மையாக பராமரிப்பதும் பக்தியின் ஓர் அங்கம்தான்.

கேள்வி: எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றலாமா?

பொதுவாக இது தேவையில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.