ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 398

கேள்வி: ஞானசம்பந்தர் திருவெண்காட்டில் உள்ள மூன்று தீர்த்தங்களும் இறைவனின் மூன்று கண்கள் என்று சொல்லியிருக்கிறார் அது பற்றி:

இதுபோல் நல்விதமாய் அந்த தீர்த்தங்கள் உண்மையில் இறைவன் அருளுக்கு பாத்திரமான தீர்த்தங்கள்தான். ஆனால் தீர்த்தங்களை பரிசுத்தமாக நல்விதமாக பக்தியோடு பராமரித்தால் அவைகள் இறைவன் அருளைத் தரும். இல்லையென்றால் தோஷத்தைதான் தரும். இறைவனை வணங்க முடியாதவர்கள் நன்றாக கவனிக்க வேண்டும் ஆலயம் சென்று இறைவனை வணங்க வாய்ப்பில்லாதவர்கள் அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடினாலே இறைவன் அருள் கிட்டும். இப்படியெல்லாம் மனிதர்கள் சூழ்ச்சி செய்வார்கள் என்றுதான் மகான்கள் தீர்த்தம் என்ற ஒன்றை கண்டுபிடித்து வைத்தார்கள். அந்த தீர்த்தத்திலும் இன்னவன் இறங்கக்கூடாது இன்ன ஜாதியில் பிறந்தவன் இறங்கக் கூடாது என்று மனிதன் கண்டுபிடித்தான். எத்தனையோ போராடியும் அவன் திருந்தவில்லை என்றுதான் த்வஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தை வைத்தார்கள். கொடிமரத்தை தொட்டு வணங்கினால் போதுமென்று. அதிலும் பல கொடிமரங்கள் அங்கே பழுதுபட்டுவிட்டன. எனவே வெறும் இராஜ கோபுரத்தை பார்த்து பரிபூரண பக்தியோடு வணங்கினால்கூட பலன் உண்டு. ஆனால் அனாச்சாரம் இல்லாத ஆலயமும் நிர்வாகமும் அங்கு செல்லக்கூடிய மனிதர்களின் தூய பக்தியும்தான் இறைவன் அருளை பெற்றுத்தரும்.

இறைவனின் கருணையைக் கொண்டு விதவிதமான பிரார்த்தனைகளை செய்து கர்மவினைகளை நீக்கிக் கொள்கின்ற ஸ்தலத்திலே இதுபோல் இந்த இடத்திலே சந்திரனின் பரிபூரண பலன் கிட்டாதவர்கள் சென்று வணங்க வேண்டிய ஸ்தலம். குழந்தை பாக்கியம் வேண்டும் என விரும்பக் கூடியவர்கள் சென்று வணங்கக்கூடிய ஸ்தலங்களில் ஒன்று.

திருவெண்காடு தலத்தைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.