ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 404

கேள்வி: அம்மையப்பன்தான் உலகம் என்று மூத்தோன் ஜெயித்தார் இளையவர் தோற்றார் இது பற்றி:

இறைவன் அருளாலே பரம்பொருள் தோற்பதுமில்லை ஜெயிப்பதுமில்லை அதுதான் உண்மை. எமக்கு தெரிந்த வரையில் மகான்கள் பார்வையில் பரம்பொருள் தோற்ற ஒரே இடம் மனிதனை படைத்ததால்தான். மனிதனை படைத்து பலவிதமான நீதி போதனைகளை கொடுத்து இதை செய் இதை செய்யாதே உனக்கு சிந்திக்கின்ற ஆற்றலை தந்திருக்கிறேன். சிலவற்றை நீயாக சிந்தித்து முடிவெடு என்று சுதந்திரம் கொடுத்தால் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்கிறான். எதை செய்ய வேண்டுமோ அதை செய்வதில்லை. உடனடியான லாபம் என்றால் எதை வேண்டுமானாலும் செய்கிறான். அதனால் பிறருக்கு எத்தனை தீங்கு வந்தாலும் பாதகமில்லை என எண்ணுகிறான். எனவே இதுபோல் நிலையிலே அவையனைத்தும் இறைவனின் லீலை விளையாட்டு. அந்த அளவில் பார்க்கப் பழகு போதும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.