ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 532

கேள்வி: பிரார்த்தனை பற்றி:

இறைவன் அருளால் ஒரு மனிதன் இதையெல்லாம் பெறலாம் இதையெல்லாம் பெறக்கூடாது என்று அவன் முந்தைய பிறவிகளின் பாவ புண்ணிய கணக்கிற்கு ஏற்பத்தான் அடுத்த பிறவி இறைவனால் வகுக்கப்படுகிறது. அப்படி தீர்மானிக்கப்பட்ட பிறகு அது வேண்டும் என்று வினவுவது மனித ஆசையாக இருக்கலாம். தரக்கூடாது என்பது விதியாக இருக்கும் பட்சத்தில் அது சற்று கடினம்தான். இருந்தாலும் ஆசைப்பட்டதை பிரார்த்தனை மூலம் நல்ல தருமத்தின் மூலம் போராடி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் கூறுவது என்னவென்றால் இவையெல்லாம் எனக்கு வேண்டுமோ இறைவா அதை நீயே தந்துவிடு. எது கிடைத்தால் எனக்கு நலமோ அதை நீ எனக்கு தந்துவிடு. எதை இழந்தால் எனக்கு நலமோ அது என்னை விட்டுப் போகட்டும் என்று இறைவனிடம் பொதுவாக ஒரு பிரார்த்தனை செய்து விடுவதே சிறப்பு. வேண்டும் வேண்டும் வேண்டும் என்று வேண்டுவதை விட வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்ற பிரார்த்தனையே உண்மையான பிரார்த்தனையாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.