ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 627

கேள்வி: சிவனேனு இரு என்பதன் பொருள் என்ன?

சிவனேன்னு இரு என்பதை எதையும் செய்யாமல் இரு என மனிதன் எடுத்துக் கொள்கிறான். அப்படியல்ல ஒரு மனிதன் புறத்தோற்றத்திலேயே செயல்படாதது போல் தோன்றினாலும் அவன் ஆத்மா நன்றாக பலம் பெற்று வினைகளை எல்லாம் முற்றிலுமாக எரித்து பிறகு சதா பத்மாசனத்திலேயே அமர்ந்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இறையோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு சதா சர்வ காலமும் அந்த இறையோடு தொடர்பில் இருக்கும் பொழுது அந்த தவத்தின் பலன் ஒலி ஆற்றல் அலைகள் எல்லாம் அவன் சார்ந்திருக்கும் இடத்தை சுற்றி பல நன்மைகளை செய்யும். அப்படி இருப்பதற்குப் பெயர் சிவனேனு இரு என்பதன் பொருள் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.