ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 606

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவன் அருளைக் கொண்டு உரைக்கின்றோமப்பா. இது போல் எந்த மாந்தனாக இருந்தாலும் இயம்புங்கால் இறை வணங்கி அறம் தொடருவதோடு சத்தியமும் கடுமையாக கடைபிடிக்கத்தான் நல்வாழ்வு. அதனைத் தொடர்ந்து முன் ஜென்ம பாவங்கள் குறைவதும் புண்ணியங்கள் சேர்வதுமாக வாழ்வு இருக்குமப்பா. அப்பனே இவையோடு மட்டுமல்லாமல் வெறும் தர்மமும் பூஜையும் சத்தியமும் மட்டுமல்லாமல் ஒரு மனிதன் இவ்வாறெல்லாம் வாழத் தொடங்கும் பொழுது அதுபோல் வழியிலே தடையின்றி செல்லும் பொழுது அந்த மாந்தனுக்கு பல்வேறு ஏளனங்களும் அவமானங்களும் நேரிடும். அது போல காலத்திலேயே அன்னவன் சினம் கொள்ளாமலும் பிறர் இவன் மனதை வருந்தும் வண்ணம் நடக்கும் பொழுது மிக மிகப் பொறுமையோடும் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் இது வெறும் வார்த்தை தான் என்று எண்ணி அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு வார்த்தைக்கு தான் பொருள் என்று மனித சமுதாயமே ஒரு பொருளை எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த பொருளை பிடித்துக் கொண்டு இவனும் மன வேதனைப்படுவது என்பது தேவையற்ற ஒன்றாகும். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் உயர்வாக எண்ணினாலும் தாழ்வாக எண்ணினாலும் அது அவனுக்கு மன சங்கடத்தை தந்தாலும் அவன் உண்மையிலேயே நல்லவனாக நடந்திருக்கும் பொழுது அவனை வேண்டுமென்றே இடர்படுத்தி அவன் மனம் புண்படும் வண்ணம் பேசும் பொழுதும் அவனோடு வேறு மனிதனையும் பழக விடாமல் தடுக்கும் பொழுதும் அறிய வேண்டும் இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் வாழ்விலே சர்வ சாதாரணம் என்று எண்ணி அமைதியாக இருக்க பழக வேண்டும். கர்மா வசப்பட்டு சிக்கித் தவிக்கும் மனிதனானவன் சுய சிந்தனை அறிவு எல்லாம் இழந்து சதா சர்வ காலமும் தன்னுடைய சுகத்தை மட்டும் பிடிவாதமாக வைத்துக் கொள்ளும் பொழுது அது கட்டாயம் ஒருவதலை பட்சமாக தான் இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.