ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 15

கேள்வி: பிரம்மஹத்தி தோஷம் பற்றி

பிராமணன் என்றால் ஏதோ ஒரு இனத்தை குறிப்பதாக எண்ணிவிடக்கூடாது. எவனொருவன் பிரம்மத்தை உணர்கிறானோ அவன்தான் பிராமணன்.
இறையை உணர்ந்து கொண்டு சாத்வீகமாக அமைதியாக தன் வழியில் வாழ்ந்து கொண்டு தான் உண்டு தன் பணி உண்டு என்றிருப்பவன் பசுவிற்கு சமம். அந்த மனிதர்களுக்கு அசுரத்தன்மை கொண்ட மனிதர்கள் கெடுதி செய்வதும் அவனை வதைப்பதுமாக பல காலங்களில் இருந்திருக்கிறார்கள். இது தான் பிராம்மணனைக் கொல்வது.

ராவணனைக் கொன்றதற்காக ராமனுக்கு எதற்காக பிரம்மஹத்தி தோஷம் பீடிக்க வேண்டும்?

ஒருவன் நல்லவனோ கெட்டவனோ நியாயமோ நியாயமற்ற நிலையோ எதைக் கொன்றாலும் தோஷம் தான். கொலை என்று மட்டுமல்ல கொலைக்கு சமமான எத்தனையோ பாவங்கள் இருக்கிறது. நம்பிக்கை துரோகத்திற்கு ஈடான வேறு தோஷம் ஏதுமில்லை.

கேள்வி: மரங்களை கொல்வதால் வரும் பாவங்களில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம்

ஒரு மரத்தை தவிர்க்க முடியாமல் அழிக்க நேரிட்டால் மிக மிக குறைந்தபடசம் ஒரு மனிதன் 1008 மரங்களையாவது நட வேண்டும். இதுதான் இதற்கு தகுந்த பரிகாரம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.