ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 611

கேள்வி: இந்த உலகத்தை அழிக்க இறைவன் எண்ணிவிட்டாரா?

மனிதர்கள் குற்றங்கள் செய்தால் தடுப்பதற்கு சிறைச் சாலையை மனிதர்கள் வைத்திருக்கிறார்கள். இந்த சிறைச் சாலையே இல்லாத நிலை என்றாவது வந்து விடுமா? அப்படி என்றால் குற்றங்களே இல்லாத மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பொருளாகிவிடும். அதைப் போல ஆன்மாக்கள் செய்கிற தவறுகளுக்கு இந்த உலகில் பிறந்து ஏற்கனவே செய்திட்ட பாவங்களுக்கு தண்டனையாக அல்லது ஒரு விதமான துன்ப அனுபவத்தை நுகர்ந்து அந்த பாவங்களை கழிப்பதற்காகத்தான் பிறவிகள் தரப்படுகின்றன. அது விலங்கு பிறவியோ மனிதப் பிறவியோ தேவ பிறவியோ இந்த பிறவியாக இருந்தாலும் ஏற்கனவே சேர்த்த புண்ணியத்தையும் நுகர வேண்டும். பாவத்தையும் நுகர வேண்டும். அப்படி நுகர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட எத்தனையோ கூடங்களுள் இந்த பூமியும் ஒன்று. எனவே இப்போதைக்கு குற்றங்களே இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை என்பதால் இந்த பூமி என்னும் சிறைச் சாலையை ஒட்டுமொத்தமாக அழிக்க இறைவன் என்னும் எண்ணவில்லை. அப்படி ஒரு சூழலும் நிகழாது. பகுதி பகுதியாக அழிவுகள் ஏற்படும். அதற்கு காரணம் வேறு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.