ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 427

கேள்வி: நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் தீர வழிபாடுகள் ஸ்தலங்கள் பற்றி:

எந்தப் பிணியாக இருந்தாலும் ஆற்றொண்ணாத கொடுநோயாக இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட பாவத்தின் காரணமாக வருவதில்லை. ஒட்டு மொத்த பாவங்களின் எதிரொலிதான் பல்வேறு விதமான துன்பங்கள் அதிலும் நோய் அதிலும் இன்னவன் குறிப்பிட்ட தந்தி தொடர்பான பிணி. இதுபோல் பிணி தீர ஒரு மனிதன் அவனால் இயன்ற வழிபாடுகளை இல்லத்திலும் எந்த ஆலயத்திலும் செய்யலாம். அடுத்து புதன் சார்ந்த ஸ்தலங்கள் சென்று வழிபாடு செய்வதாலும் சனி சார்ந்த ஸ்தலங்கள் சென்று வழிபாடு செய்வதாலும் இன்னவன் கூறிய நரம்பு தொடர்பான பிணிகள் கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுபோல் ஏழை பிணியாளர்களுக்கு இயன்ற மருத்துவ உதவிகளை நல்விதமாய் அன்பாய் ஆதரவாய் தொடர்ந்து செய்ய இந்தப் பிணி மட்டுமல்லாமல் மற்ற பிணிகளும் கட்டுக்குள் வரும். குறிப்பாக கூற வேண்டுமென்றால் திருவெண்காடு சென்று வழிபாடு செய்வதும் பழனி சென்று முருகப் பெருமானையும் போகனையும் வணங்குவதும் இதுபோல் மதுரை அன்னை மீனாளை வணங்குவதும் (இன்னவன் கூறியதால் குறிப்பிட்ட ஸ்தலங்களை கூறியிருக்கிறோம்) இன்னும் சில ஸ்தலங்கள் சென்று வணங்குவதால் நரம்பு தொடர்பான பிணிகள் குறையும். எனவே நரம்பு தொடர்பான பிணிகள் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் இதுபோன்ற ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து பலன் அடையலாம். தீவிரமான வழிபாடு ஒரு பிணியை குறைக்கும். ஆனாலும் அந்தப் பிணியோடுதான் அந்தப் பிறவியில் அவன் கடைவரையில் வாழ வேண்டும் என்று பிரம்மன் விதி எழுதியிருந்தால் அதனை மாற்ற யாராலும் முடியாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.