ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 498

கேள்வி: நேர்மையாக கடுமையாக எவ்வளவு உழைத்தாலும் அதற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து:

இறைவனின் கருணையால் பிறரின் நேர்மையான உழைப்பை உறிஞ்சி ஒரு பிறவியிலே வாழ்ந்தவர்கள் மற்ற பிறவியில் நேர்மையாக உழைத்து உழைத்து களைத்து போக வேண்டும் என்ற சாபத்தை பெற்று வருகிறார்கள். இந்த சாபத்தில் இருந்து வெளியே வருவதற்கு அன்றாடமோ அல்லது அனலி வாரம் என்று சொல்லப்படும் ஞாயிறு தோறுமோ அல்லது அவரவர்களின் ஜென்ம நட்சத்திரம் மாதம் தோறும் வருகின்ற தினத்தன்று 108 முறை நவகிரகங்களை வலம் வந்து அதுபோல் 108 எள் எண்ணை தீபம் ஏற்றி வழிபாடு செய்து தன்னுடைய மனதில் உள்ள குற்றங்களை குறைத்துக் கொண்டால் கட்டாயம் எதிர் பார்த்த நற்பலன் கிட்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.