ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 4

கேள்வி: ஒரு பெண் காதல் திருமணம் செய்வது குற்றமா?

சித்தர்களுக்கு தர்மசங்கடமான விஷயங்கள் எத்தனையோ உண்டு. அவற்றில் ஒன்று தானப்பா இந்த காந்தர்வ மனம் (காதல் திருமணம்). ஏனென்றால் எம் முன்னே அமரும் பிள்ளைகள் எங்கள் காதலை இணைத்து வையுங்கள் என்று எங்களிடம் மன்றாடுகின்றனர். அதே சமயம் அவர்களின் பெற்றாறோரும் எம் முன்னே அமர்ந்து பிள்ளைகளின் காதலை பிரித்துவிடுங்கள் என்று கேட்டு விடுகிறார்கள். நாங்கள் யாருக்கு துணை நிற்பது? ஆனால் திரும்ப திரும்ப அடிப்படையில் நாங்கள் கூறுவது என்னவென்றால் ஒரு நல்ல மைந்தனை ஒரு பெண் நேசிப்பது பாவமல்ல. ஜாதி மதம் என்பதெல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்டது. எனவே இதில் யாம் கூறுவது மைந்தன் திருப்பதியான குணாதிசயம் கொண்டவன் என்றால் திருமணம் நடத்தி வைப்பதில் எந்த தவறும் இல்லை என்பது தான் எமது பொதுவான வாக்கு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.