ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 633

அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

ஐப்பசி மாதமான இம்மாதத்தில் அனைவரும் நதிகளான காவிரியிலும் தாமிரபரணியிலும் நீராடுதலை கட்டாயமாக செய்ய வேண்டும். இதை யான் அறிவியல் பூர்வமாகவே எடுத்துரைக்கின்றேன். இந்த ஐப்பசி மாதத்தில் துருவ எனப்படும் நட்சத்திரம் அதைக் கோள் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அந்த நட்சத்திரமானது இவ் பூமியை நெருங்கி இம்மாதத்தில் (ஐப்பசி) பிரகாசிக்கும். சூரியனும் சந்திரனும் கீழ்நோக்கி பயணிக்கும். மேலிருந்து கிடைக்கும் நல் சக்திகளை இக்கோளானது தடுத்துவிடும். மேலிருந்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மூலம் கிடைக்கின்ற நன்மை தரக்கூடிய ஒளியை இக்கோளானது உள்வாங்கி தீயதை பிரதிபலிக்கும். இந்த தீய ஒளியானது மனிதர்கள் உடம்பில் படும் பொழுது நோய் நொடிகள் வந்து இறை பலன்கள் கிட்டாமல் போவது போன்ற பலன்கள் ஏற்படும். இவற்றில் இருந்து மனிதர்களை காக்கவே யாம் காவேரி நதியை உருவாக்கினோம். தாமிரபரணி நதியையும் உருவாக்கினோம். இதை யாம் அறிவியல் ரீதியாகவே உருவாக்கியுள்ளோம். இவ்வுலகமானது அழிவை நோக்கியே செல்கின்றது. அநியாயங்களும் அக்கிரமங்களும் பெருகும். மனித குலம் எண்ணிலடங்கா துன்பத்திற்கு ஆளாவார்கள்.

நல்லோர்களையாவது யாம் காப்பாற்ற வேண்டியே வாக்குகளாக செப்புகின்றோம். அத்தீய ஒளியில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள கட்டாயமாக காவிரியிலும் தாமிரபரணியும் நீராட வேண்டும். நவகிரகங்களின் ஒளியும் இம்மாதத்தில் கதிர்வீச்சாக அதிகமாக இருக்கும். அதை மனிதர்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவே யான் நவ கைலாயங்களையும் நவ திருப்பதிகளையும் யாமே உருவாக்கினோம். மனிதர்கள் அந்த தீய ஒளியில் இருந்து தப்பித்துக் கொள்ள நவகிரகங்களின் நன்மைகளைப் பெற நதிகளில் நீராடிவிட்டு நவகைலாயங்களையும் நவதிருப்பதிகளையும் நல்முறையாக பக்தியோடு தரிசனம் செய்தால் நன்மைகள் பெருகும். நதிகள் ஆன காவிரியிலும் தாமிரபரணியிலும் இம்மாதத்தில் (ஐப்பசி) ஈசனும் பெருமாளும் இவையன்றி கூற பிரம்மாவும் நல்முறையாக வந்து நீராடிச்செல்வார்கள். இம் மாதத்தை (ஐப்பசி) இதை சனியவனும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வான். இம்மாதத்தில் (ஐப்பசி) சனியவன் ஆதிக்கமும் சற்று அதிகமாக இருக்கும். அவந்தனுடைய சக்திகள் மிகுந்து காணப்படும். சனியவன் என்பவன் நேர்மையுடனும் உண்மையான பக்தியுடன் நல் ஒழுக்கத்தோடு இருப்பவர்களுக்கு வாரி தருவான். தீய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இம் மாதத்தில் அவந்தன் தக்க தண்டனையும் வழங்குவான். வரும் காலங்கள் அழிவு காலங்கள்.

என்னுடைய ஒவ்வொரு வாக்கிற்கும் அறிவியல் பூர்வமாகவே யாம் நிரூபித்து உருவாக்கியுள்ள பெருமாளின் நவதிருப்பதிகள் ஈசனின் நவகைலாயங்கள் நல்முறையாக நீராடி விட்டு நீராடி விட்டு சென்று சென்று கொண்டே இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம். இன்னும் என்னுடைய வாக்கு ஒவ்வொன்றும் அறிவியலோடு சம்பந்தப்படுத்தி அறிவியலும் இறைவனும் எப்படி என்பதை நான் ஒவ்வொரு வாக்குகளாக எடுத்துரைப்போம். பக்தர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக வாழுங்கள். இவ்வுலகம் அழிவு நிலையை நோக்கி செல்கின்றது. சித்தர்கள் யாங்கள் நல் மனிதர்களையாவது காப்பாற்ற வேண்டியே வாக்குகள் உரைத்து கொண்டிருக்கின்றோம். இவ்வுலகத்திற்கு மனிதனாலே மனிதர்களுக்கு அழிவு ஏற்படும் அக்காலம் வந்துவிட்டது. சித்தர்கள் நாங்கள் ஒவ்வொரு ரூபத்திலும் சென்று ஒவ்வொரு மனிதர்களின் மனதை மாற்றி அந்த அழிவுகளை தடுத்துக் கொண்டே இருக்கின்றோம். இன்னும் சூட்சுமமாகவே யாம் என்னென்ன அறிந்திருக்கிறேனோ அவற்றையெல்லாம் இவ்வுலகத்திற்கு அறிவியல் பூர்வமாகவே தெரிவிக்கும் சமயங்கள் வந்துவிட்டது. நல்லோர்கள் வாழட்டும். ஆசிகள் ஆசிகள் நலமாக நலமாக.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.