ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 695

கேள்வி: தற்காலத்தில் இருக்கும் அறிவியல் கருவிகளை அதிகமாக சார்ந்து இருப்பது சாதகமா? பாதகமா?

இன்னும் இன்னும் கருவிகளுக்கு மனிதன் அடிமையாகிக் கொண்டே போவான். உடல் உழைப்பு என்பது குறைந்து கொண்டே செல்லும் ஆனாலும் கூட அப்பொழுதும் வறுமை இருக்கும். அப்பொழுதும் எல்லோருக்கும் எல்லாம் என்கிற நிலை இல்லாமல் சிலருக்கு மட்டும் என்கிற நிலைதான் இருந்து கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் இறைவன் அருளால் மனிதன் இன்னும் இன்னும் புதிய உத்திகளையும் கருவிகளையும் இப்பொழுது உள்ள கருவிகள் மேம்பாடு அடைவதற்குண்டான சூழலையும் ஏற்படுத்தி பிரயாணம் என்பது மிக மிக எளியாக இருப்பது போன்ற சூழல் ஏற்படும். இப்பொழுது நகர்ப்புறங்களிலே நகருக்குள் சுற்றுவதற்கு சிறு சிறு வாகனங்கள் இருப்பது போல அதே நகர்ப்புறங்களுக்கு சென்று வர வானத்திலே பறப்பதற்கு வாகனங்கள் வந்துவிடும். அந்த வாகனத்தை அவனவன் இல்லத்திலிருந்து அவனவனே இயக்குகின்ற நிலை மிக பரவலாக எதிர்காலத்தில் வந்துவிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.