ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 425

கேள்வி: காரணமின்றி காரியம் இல்லை. இதற்கு இறை விளக்கம் தருக:

இறைவனின் கருணையாலே எல்லா காரியங்களுக்குப் பின்னாலும் காரணம் இருக்கிறது. ஆனால் அந்தக் காரணத்தை மனிதன் ஏற்றுக் கொள்வதுதான் கடினமாக இருக்கிறது. ஏனென்றால் மனிதன் முழுக்க முழுக்க உடல் ரீதியாக வருகின்ற எந்த துன்பத்தையும் அவன் அனுபவித்து தீர்க்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. அது அனுமதிக்கவுமில்லை. ஆனால் உடல்ரீதியாக ஒரு மனிதனுக்கு ஒரு துன்பம் வருகிறது என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. புரிவதுபோல் கூறவேண்டும் என்றால் அம்மை நோய் ஒரு குழந்தையை தாக்கிவிட்டால் அது துன்பம். அந்தக் குழந்தை துடிக்கும். பெரியவர்களை தாக்கினாலும் சிறியவர்களை தாக்கினாலும் துன்பம்தான். வெம்மையின் மிகுதியால் இந்தப் பிணி தாக்குவதாக கூறப்படுகிறது. ஒருவித நுண் கிருமியால் இந்த நோய் வருவதாக விஞ்ஞான அறிவு மனிதனுக்கு சொல்லித் தந்திருக்கிறது. இந்த நோய் மனிதனை தாக்கினால் துன்பம். இது மனிதனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்த நோய் ஒரு மனிதனை தாக்கிய பிறகு அந்த மனிதனுக்குள் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகுகிறது என்பது உண்மை. இதுவும் விஞ்ஞானம் கூறுகிறது. எனவே எந்தவொரு துன்பத்திற்குப் பின்னாலும் ஒரு மனிதனுக்கு நன்மையை தரக்கூடிய ஒரு நிகழ்வு இருக்கும் என்பதே உண்மையாகும். இதை பொறுமையோடு சிந்தித்துப் பார்த்தால் ஒரு மனிதனுக்கு புரியும். பொறுமை இல்லையென்றால் காரணமில்லாமல் இந்த துன்பம் வந்திருக்கிறது என்பதுபோல் தோன்றும்.

இப்படிக் கூறினால் ஒரு மனிதனுக்கு வேறுவிதமான ஐயம் வரும். எல்லாம் சரி குருதேவா ஒரு தாய் தந்தைக்கு நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் இருக்கிறது. பல்வேறு ஆலயங்கள் சென்று பிரார்த்தனை செய்து தர்மங்களை செய்து ஒரு குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். அன்போடும் ஆசையோடும் வளர்க்கிறார்கள். இருபது வயது வளர்ந்த பிறகு அந்தக் குழந்தை திடீரென நோய் வாய்பட்டோ விபத்திலோ இறந்து விடுகிறது. தாய் தந்தைக்கு துக்கம் தாங்க முடியவில்லை. கதறுகிறார்கள் அழுகிறார்கள். இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இந்த துன்பத்திற்கு என்ன நியாயம் இருக்கும்? இந்த துக்கம் அவர்களைவிட்டு என்றுமே நீங்காதே? இன்னும் இதுபோல பல நிகழ்ச்சிகள் மனித வாழ்க்கையிலே நீக்க முடியாத துன்பமாக இருக்கிறதே? இதை எப்படி எடுத்துக் கொள்வது? இந்த இடத்தில்தான் கர்மாவை ஒரு மனிதன் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை பிறந்து ஆசையோடும் அன்போடும் வளர்க்கப்பட்ட பிறகு தாய் தந்தையரை விட்டு பிரிகிறது என்றால் அங்கே மூன்று ஆத்மாக்களின் கர்மா இணைக்கப்படுகிறது. அதற்குப் பின்னாலும் பலவிதமான கர்மக் கணக்கு இருந்தாலும் புரிவதற்காக சுருக்கமாக கூறுகிறோம். முதலில் அந்தக் குழந்தையை பிரிந்து துக்கப்பட வேண்டும் என்று அந்த தாயின் கர்மாவும் தந்தையின் கர்மாவும் இருக்கிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.